districts

img

மிக பழமையான இலக்கியம் இன்றும் உயிருடன் உள்ளது

கோவை, பிப்.26- 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இலக்கியம், இன்றும் உயிருடன் உள்ளது என  சிறுவாணி பண்பாட்டு திருவிழா வில் தமிழறிஞர் எஸ்.வி.ராஜதுரை தெரிவித்துள்ளார். கோவை பிஎஸ்ஜி கல்லூரியில்,  இரு நாட்கள் நடைபெற்ற சிறு வாணி பண்பாட்டு திருவிழா சனி யன்று துவங்கியது. இந்நிகழ்வில் பங்கேற்ற தமிழறிஞர் எஸ்.வி. ராஜதுரை பேசுகையில், இலக் கியத்துக்கு நீண்ட வரலாறு உண்டு.  முதலில் தோன்றிய இலக்கியம் குறித்து ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலில் வாய்மொழியாக இருந்த  இலக்கியம், பிறகு எழுத்து வடி வத்துக்கு மாறியது. சுமேரியா நாக ரிகத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு இலக்கியத்தை படைத்தார். அது இப்பவும் உயிரு டன் உள்ளது. எத்தனையோ அழி வுக்கும், சிதைவுக்கும் பிறகும் மெச படோமியா, சுமேரியா நாகரீகத்தின்  எச்சங்கள் இன்றும் உள்ளன. அந்த எச்சங்களில் மிகப்பெரும்  பகுதி, அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் படையெடுப்பால் நாசமாக் கப்பட்டு விட்டன. இருந்தாலும்,  அந்த எழுத்துக்கள், கலைப்  படைப்புகள் பல்வேறு அருங்காட்சி யகங்களில் பாதுகாக்கப்பட்டு  வருகின்றன. ஹோமருக்கு முன்பே, அவரின் முன் வரைவுகள்  எனச் சொல்லக்கூடிய காப்பியங் களை படைத்த எகிப்தியப் பெண் மணி பென்டாசியா என்பவர் இருந் துள்ளார். அதோடு மட்டுமின்றி, கிரேக்கம், ரோமாபுரி, சுமேரியா,  தமிழ் நாகரீகங்களில் பண்டைய  காலத்தில் பெண்கள் மிகப்பெரிய  எழுத்தாளர்களாக, சிந்தனை யாளர்களாக இருந்துள்ளனர் என்றார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற படைப்பு அரங்கத்தில், “வரலாறு வழிகாட்டும்” என்ற தலைப்பில் எழுத்தாளர் த.ஸ்டாலின் குண சேகரன் பேசுகையில், வரலாற்றை  வளைக்கக்கூடாது; மிகைப் படுத்தக்கூடாது; வரலாறு வர லாறாகவே இருக்க வேண்டும். வர லாற்றில் இடஒதுக்கீடு கிடையாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் எங் காவது தாழ்த்தப்பட்டவர்களோ அல்லது அந்தக் காலத்தில் முடக் கப்பட்டவர்களோ, அடக்கப்பட்ட வர்களோ வரலாற்றின் மூலம் அடங்கி போய்விடக்கூடாது. அவர் கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்  என்பது மிக முக்கியம். நான் பேச் சாளன், எழுத்தாளன், செயல்பாட் டாளன் ஆக வேண்டும் என எப் போதும் சிந்தித்ததில்லை. ஆனால்,  நான் நினைப்பதை மாணவர்கள், குழந்தைகள் மனதில் பதிய வைக்க  வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையில், 40 ஆண்டு களுக்கு மேலாக பேசிக் கொண்டி ருக்கிறேன். பேசுவது, எழுதுவது, செயல்படுவதால் தமிழ்ச்சமூகம் முன்னேறும் என நம்புகிறேன். நான்  மட்டுமல்ல;அனைவரும் இணைந்து செயல்பட்டால் சமுதா யத்தில் பெரும் மாற்றத்தை ஏற் படுத்த முடியும், என்றார்.