districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் ஸ்கிராப் தொழிலாளர்களுக்கு வேண்டுகோள்

கோவை, நவ.17- ஸ்கிராப் தொழிலில் ஈடுபடுபவர்கள் சந்தேகத்துக்கி டமான வாகனங்கள் என்று தெரிந்தால் உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என காவல் துறை அதி காரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போக்குவரத்து துணை ஆணையாளர் அசோக்குமார் தலை மையில் பழைய வாகனங்களை உடைத்து உதிரிபாகங்கள் மற்றும் இரும்பு சாமான்கள் விற்பனை செய்யும் வியாபாரி களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்  நூற்றுக்கும் மேற்பட்ட உதிரி பாகங்கள் விற்பனை யாளர்கள், வியாபாரிகள் மற்றும் இருசக்கர நான்கு சக்கர  வாகன ஒர்க்சாப் முதலாளிகள் ஆகியோர் கலந்து கொண் டனர்.  இக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள், வியாபாரி களுக்கு பழைய வாகனங்களை உடைத்து உதிரி பாகங் களை விற்பனை செய்ய முறையான அனுமதி மற்றும் உரிமம்  பெற வேண்டும் என தெரிவித்தனர். மேலும், தாங்கள் பெறும்  உரிமத்தை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க  வேண்டும் மற்றும் பழைய வாகனங்களை உடைத்து உதிரி பாகங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் தங்கள் கடை களுக்கு வரும் வாகனங்கள் மற்றும் உடைக்கப்பட்ட வாக னங்களை பதிவு செய்து பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினர். அதேபோல கடைக்கு கொண்டு வரப்படும் வாக னங்கள் திருட்டு வாகனங்களாக இருப்பின் அல்லது சந் தேகத்துக்கு இடமளிக்கக்கூடிய வாகனங்களாக இருந்தால்  உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் உரிமம் வைத்திருப்பவர் இரண்டாவது முறையாக நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் தவறு செய்த  நபருக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம்  ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரி வித்தனர்.

ஓடும் பேருந்திலிருந்து விழுந்த சிறுமி படுகாயம்

கோவை, நவ.17- அன்னூர் அருகே வளைவில் திரும்பியபோது ஓடும் பேருந்திலிருந்து சிறுமி தவறி விழுந்து படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள ருத்திரி யாம்பாளையத்தை சேர்ந்த 15 சிறுமி, அதேபகுதியிலுள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்  பள்ளி முடிந்ததும் அரசு பேருந்து மூலமாக வீட்டிற்கு புறப் பட்டார். பேருந்து அன்னூர் கைகாட்டி சந்திப்பு அருகே  வளைவில் திரும்பும் போது சிறுமி பேருந்தில் இருந்து  கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து  உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாகச்சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென் றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

செயின் பறிக்க முயற்சி

நாமக்கல், நவ.17- நாமக்கல்லில், சேலம் ரோடு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாக னத்தில் வந்த 2 பேர், அந்த  பெண் கழுத்தில் அணிந் திருந்த 7 பவுன் செயினை பறிக்க முயன்ற போது அந்த பெண் கூச்சலிட்டார். கொள்ளையர்கள் 2 பேரும் தப்பி ஓடி விட்டனர்.  இது குறித்து அந்த பெண் நாமக்கல் நகர  போலீசில் புகார் அளித்தார். மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

ரேசன் அரிசி பதுக்கல் - ஒருவர் கைது

தருமபுரி, நவ.17- ஒரு டன் ரேசன் அரிசி மூட்டைகளை பதுக்கிய நபரை,  குடிமை பொருள் வழங்கல் துறையினர் கைது செய்துள் ளனர்.  தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்த தம்மனம் பட்டியில் ரேசன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக, தருமபுரி  மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயகுமாருக்கு தகவல் கிடைத் துள்ளது. இதையடுத்து தருமபுரி ஆர்ஐ சிங்காரவேலன், நல்லம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் உமாராணி மற்றும்  குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீ சார் தம்மனம்பட்டிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் 22 மூட்டைகளில், ஒரு டன்  ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.  இதையடுத்து, ரேசன் அரிசியை கடத்துவதற்காக பதுக்கிய உங்காரனஹள்ளியைச் சேர்ந்த வெங்கடாஜலம் (45) என்பரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேசன் அரிசியை பறிமுதல்  செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கில்  ஒப்படைத்தனர். 

மோசடி

சேலம், நவ.17- சேலம், கருங்கல்பட்டி யை சேர்ந்தவர் தர்ஷினி ஐடி  கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இநு நிலையில், ஆன்லைனில் பகுதி நேர வேலைக்காக விளம்பரத்தை பார்த்து  விண்ணப்பித்துள்ளார்.  அதில், குறைந்த பணம்  முதலீடு செய்தால் அதிக வட்டி வருவதாக கூறிய தால்,  அவர் ரூ.4.77 லட்சத்தை  கட்டி உள்ளார். ஆனால்  அதன் பின்னர் அவர்களை  தொடர்பு கொள்ள முடிய வில்லை. இதுகுறித்து சேலம்  சைபர் கிரைம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.

யானை தாக்கி பெண் படுகாயம்

கோவை, நவ.17- துடியலூர் அருகே காட்டுயானை தாக்கி யதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையத்தில் மத்திய ரிசர்வ் படையின் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.  இந்நிலையில், புதனன்று இரவு பயிற்சி வளாக குடியிருப்பில் வசிக்கும் மத்திய ரிசர்வ்  படை ஜஜியின் மெய் காவலர் மோகனின் மனைவி ராதிகா என்பவர் நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது வனத் திலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண்  காட்டு யானை, ராதிகாவை துரத்தி   தாக்கியது. இதில் தலையில் படுகாயடைந்த  அவரை அங்குள்ளவர்கள் மீட்டு வளா கத்தில் உள்ள சிஆர்பிஎப் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு  அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது. இதன்பின் மேல் சிகிச்சைக்காக துடிய லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதனிடையே மத்திய ரிசர்வ் படை வளாகத்திற்குள் யானை புகுந்த  தகவல் வனத்துறையினருக்கு அளிக்கப் பட்டதை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறை யினர் யானையை வனத்திற்குள் விரட் டினர். 

கந்து வட்டிக்கொடுமை: பெண் புகார்

ஈரோடு, நவ. 17- மருத்துவ செலவிற்காக வாங்கிய கடனுக்கு இரு சக்கர வாகனங்கள், தங்கத்  தாலியை பெற்றுக் கொண்டு பத்திரத்தில்  கையெழுத்திடுமாறு கந்து வட்டிக்காரர்  மிரட்டுவதாக ஈரோடு காவல் கண்காணிப் பாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்யின் மனைவி செங்காவேரி (24).  இவர் மருத்துவ செலவிற்காக அப்பகுதி யிலுள்ள அஜ்ஜீ பிரசன்னா என்பவரிடம் ரூ.1 லட்சம் கடன் பெற்றுள்ளார். அதற்கு அடமான மாக அவரது ஸ்கூட்டி, அவரது கணவரது பைக் மற்றும் தங்கத்தாலியையும் பெற்றுக் கொண்டு கடன் வழங்கப்பட்டது. கடந்த 4 மாதங்களாக மாத வட்டி ரூ.11ஆயிரத்து 500  வீதம் செலுத்தி வந்தனர்.  இந்நிலையில், கடந்த மாதம் தவணை  செலுத்த முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து பிரபு என்பவர் செல் போனில் தொடர்பு கொண்டு மிரட்டி வருவ தாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செங் காவேரி புகார் அளித்துள்ளார்.

கடும் பனிப்பொழிவு

சேலம், நவ.17- சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்தது. இம்மழை காரணமாக சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட் டுள்ளது. இரவு நேரத்தில் கடும் குளிரும், காலையில் பனிப்பொழிவும் நீடிக்கிறது.  இதனால் வாகன ஓட்டி கள் முகப்பு விளக்கை எரிய  விட்டவாறு பயணம் செய் கின்றனர்.

சிக்னல்கள் முறையாக இயங்க நடவடிக்கை: கோவை ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவை, நவ.17- போக்குவரத்து சிக்னல்கள் சரி யான முறையில் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலை பாதுகாப்பு கூட்டத்தில் அதி காரிகளுக்கு கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலைப் பாது காப்பு, சட்டம் - ஒழுங்கு தொடர் பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை யில் நடைபெற்றது. இதில் அவர்  பேசுகையில், கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. இந்நிலையில் சாலைப் பாது காப்பு தொடா்பாகவும், சாலை விபத்துகளை தடுக்கும் வகையிலும்  வாகன ஓட்டிகளுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  நெடுஞ்சாலைத் துறையினர் சாலை களில் தேவையான இடங்களில் மின்னும் ஒட்டுவில்லைகள், வேகத் தடை, பாதசாரிகள் நடைபாதை கோடு, எச்சரிக்கைப் பலகைகள் ஆகி யவை அமைக்க வேண்டும். போக்கு வரத்து சிக்னல்கள் அனைத்தும் சரி யான முறையில் செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள் ளாட்சி அமைப்புகளால் நடத்தப் படும் கூட்டங்களில் சாலைப் பாது காப்பு குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்த வேண்டும். மேலும் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் இயக்கப் படும் வாகனங்களால்தான் அதிக  அளவு விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை உணர்ந்து வாகன ஓட்டிகள்  அதிவேகத்தில் செல்வதை தவிர்க்க  வேண்டும். இது தவிர இருசக்கர வாக னங்கள் ஓட்டும்போது தலைக் கவசமும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட்டும் கட் டாயம் அணிய வேண்டும், என்றார். முன்னதாக, இக்கூட்டத்தில் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரி நாராயணன், மாநகரக் காவல் துணை ஆணையர்கள் அசோக்குமார், மதிவாணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா ஆனந்த், பொள்ளாச்சி சார் ஆட்சி யர் பிரியங்கா உள்ளிட்ட அதிகாரி கள் கலந்து கொண்டனர்.

பயிர் சேதார தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை

தாராபுரம், நவ - 15 வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் பயிர் சேதாரங் களின் தடுப்பு நடவடிக்கையாக விவசாயிகள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து  தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். பருவ மழையின்போது பயிர்களின் சேதாரத்தை தடுக்க குண்டடம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ச.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, நிலங்களில் போதுமான அளவு வடிகால் வசதிகளை ஏற்படுத்துவதன் மூலமாக சாகுபடி செய்த பயிர்க ளில் தண்ணீர் தேங்காமல் பாதுகாக்கலாம். மேலும் பயிர்க ளைச் சுற்றிலும் வசதிக்கேற்ற வகையில் ஆழ, அகலமுடன் கூடிய கால்வாய் போன்ற அகழிகளை வெட்டி மழை  நீரினை வயலுக்குள் தேங்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். 75-80 சதவீதத்திற்கு மேல் அறுவடைக்கு தயாராக உள்ள காய்கறி மற்றும் பழங்களை அறுவடை செய்வதன் மூலமாக அதிகப்படியான மழையினால் விளைச்சலில் ஏற்படும் சேதா ரங்களை தவிர்க்கலாம். காய்கறி மற்றும் மலர்ப்பயிர் களுக்கு நிலப்போர்வை பயன்படுத்துவதன் மூலமாக அதிகப்படியான நீரானது வேரினை சுற்றி தேங்குவது தடுக்கப் பட்டு வேர் அழுகல் பாதிப்பினை தவிர்க்கலாம்.     காற்றினால் அதிகளவு பாதிக்கப்பட வாய்ப்புள்ள வாழை போன்றவற்றிற்கு முட்டுக் கொடுக்க வேண்டும். காய்கறி,  பப்பாளி, வாழை மற்றும் மலர்ப்பயிர்களுக்கு பழுத்த கீழ்மட்ட இலை மற்றும் கிளைகளை அகற்றிவிட்டு மண் அணைத்து கொடுக்க வேண்டும். தென்னையில் காய்ந்த ஓலை மற்றும் பழமரச் செடிகளான மா, கொய்யா, சப்போட்டா போன்றவற்றில் உள்ள அதிகப்படியான மற்றும் காய்ந்த கிளைகளை கவாத்து செய்து காற்றினால் ஏற்படும் பாதிப்பினை குறைக்க வேண்டும். படரும் இரகங்களைச் சார்ந்த வெள்ளரி, பாகல், பீன்ஸ், தக்காளி மற்றும் குடை மிளகாய் போன்றவற்றிற்கு குச்சிகளை கொண்டு போதிய அளவு ஊன்றுகோல் அமைத்திட வேண்டும். மழைநீர் தேங்கி யுள்ள இடங்களில் நாற்று நடுதல், விதைத்தல், உரமி டுதல் மற்றும் மருந்து தெளித்தல் போன்ற பணிகளை விவசா யிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். மழை யினால் ஏற்படும் சேதாரத்தினை ஈடு செய்ய பயிர்களை விவசா யிகள் காப்பீடு செய்திருக்க வேண்டும். நிழல் வலைக் குடில்  மற்றும் பாலித்தீன் குடில் போன்றவை பாதிக்கப் படாமல் இருக்க அவற்றின் அடிப்பாகம் போதுமான இணைப் புக் கம்பிகளால் பலமாக நிலத்துடன் இணைக்கவும் மற்றும் நிழல்வலை மற்றும் பாலிதீன் தாள்களில் சேதாரம் ஏற்பட்டிருப் பின் உடனடியாக சரி செய்து அதிகப்படியான இழப்பினை தடுக்கவும் வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூய்மை பணியாளர் ஊதியத்தை குறைத்து அநீதி திருப்பூர் மேயரிடம் சிபிஎம் கவுன்சிலர் கோரிக்கை

திருப்பூர், நவ. 16 - திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக் கப்பட்ட பகுதிகளில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியத் தைக் குறைத்து அநீதி இழைக்கப்பட் டுள்ளது. அவர்களுக்கு உடனடியாக ஊதிய உயர்வு அளித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ர.மணி மேகலை கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக புதன்கிழமை மேயர் ந.தினேஷ்குமாரிடம் மாமன்ற உறுப்பினர் மணிமேகலை அளித்த மனுவில் கூறியிருப் பதாவது: 2012ஆம் ஆண்டு திருப்பூர் மாநக ராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் 34  தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்த னர். அவர்களில் பணி ஓய்வு, மரணம் என 10 பேர் போக 24 பேர் வேலை செய்து வருகின்ற னர். இவர்களை சிறப்பு காலமுறை ஊழியர்க ளாக்கி மாத ஊதியம் ரூ.5 ஆயிரம் வழங்கப் பட்டது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த தூய்மைப் பணியாளர், குடிநீர் பணியாளர், ஓட்டுநர்களுக்கு அரசாணை 62 (2டி) படி  குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து வழங்கப்பட்டது. அதன்படி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.17ஆயிரம் வரை வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தணிக்கை ஆட்சேபனை என இந்த 24  தூய்மை பணியாளர்களுக்கும் ஊதியத் தைக் குறைத்து ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7  ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. இது மிக வும் அநீதியாகும். மாநகராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப் படும் ஊதியத்தை விடவும் இவர்களுக்கு மிகக் குறைவாக வழங்கப்படுகிறது. தற்போ தைய விலைவாசி சூழலில் இவர்கள் மிகவும் வறுமையில் துயரத்துடன் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். எனவே உடனடியாக இந்த 24 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் ர.மணிமேகலை கேட்டுக் கொண்டிருக் கிறார்.

அப்பாவிகளை குறிவைக்கும் லோன்மேளா

அவிநாசி,நவ.17 - திருப்பூர் மற்றும் அவிநாசி உள்ளிட்ட இடங்களில் லோன் மேளா என்று துண்ட றிக்கை விநியோகித்து அப்பாவி பொது மக்களை ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது-  திருப்பூர், அவிநாசி, பேருந்து நிறுத்தம் அருகில் இளைஞர்கள் மூலமாக லோன் மேளா என்று துண்டறிக்கை அச்சடிக்கப்பட்டு பொதுமக்களிடம் விநியோகம் செய்து வரு கின்றனர். இந்த துண்டறிக்கையில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண் டால், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் ஸ்மார்ட் போன் மற்றும் பதிவு செய்ய ரூ 100   எடுத்து வரவேண்டும் என்கின்றனர். இதனை நம்பி பொதுமக்களும் கேட்ட ஆவணங்க ளை அவர்கள் சொல்கிற முகவரிக்கு எடுத்து செல்கின்றனர். அங்கு பதிவுத்தொகை என ரூ100ஐ வசூலித்து விடுகின்றனர். இதன்பின் னர், அவர்களின் ஸ்மார்ட் போனை பெற்று தனியார் கடன் செயலியை பதிவேற்றம் செய்து விடுகின்றனர். பின்னர் உங்களுக்கு அழைப்பு வரும் என தெரிவிக்கின்றனர். இதனை நம்பிய அப்பாவி பொதுமக்கள் கடன்  வரும் என காத்துக்கிடக்கிறார்கள். திரும்ப கேட்டால் தங்களுக்கு சிபில் ஸ்கோர் இல்லை உங்கள் வங்கிக் கணக்குடன் ஜிமெயில் ஐடி இணைக்கவில்லை. இதனால் தற்போது கடன் பெற முடியாது என்று, அனுப்பி விடுகின் றனர். இதில் லோன் பெறாதவர்களை திருப்பி அனுப்பும் போது செல்போனில் பதிவேற்றம் செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வந்த  ஓடிபி எண்கள் அனைத்தையும் நீக்கம் செய்து விட்டு செல்போனை திருப்பித் தருகின்றனர். இதில் குறிப்பிடுவது ஆப் மூலம் லோன் பெற்றால் தங்களுடைய அந்தரங்கங்கள், மற்றும் தகாத வார்த்தையில் பேசி திட்டு வது போன்ற செயல்கள் நடந்த வண்ணம் உள்ளது- இதுகுறித்து போலீசாரும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால், எந்த அனுமதியும் பெறாமல், துண்டறிக்கை அச்சடித்து லோன் மேள என்று பதிவேற்றம் செய்து, அப்பாவி பொதுமக்களை ஏமாற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், திருப்பூர் பகுதியில் லோன் மேளா என்று இளைஞர்கள் மூலமாக துண்ட றிக்கை விநியோகம் செய்து அப்பாவி பெண் கள், பொதுமக்கள் நம்பி செல்கின்றனர் அங்கு செல்லும்போது சிறிய அறையில், மூன்று முதல் நான்கு பேர்  அமர்ந்து கொண்டு லோன் ஆப் மூலமாக, பணம் பெற்று தருவ தாக  என்றும் கூட கூறாமல் கடன் பெற்று தருகி றோம் என்கின்றனர்.  எந்தவிதமான அரசு அங்கீகாரம் இல்லாமல் ஏமாற்றி வரும் இது போன்ற மோசடி கும்பலை காவல்துறை, மாவட்ட நிர்வாகம் கண்காணித்து சட்டப்ப டியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பருத்தி ஏலம்

அவிநாசி,நவ.17 - அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் நடைபெறும் பருத்தி ஏலத்தில் ரூ.31 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.  பருத்தி ஏலத்திற்கு, மொத்தம்  1121 பருத்தி மூட்டைகள் மட்டும் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச். பி.டி.ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு  ரூ. 7500 முதல் ரூ.9999வரையிலும், கொட்டுரக (மட்டரக) பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500 முதல் ரூ.4000 வரையிலும் ஏலம் போனது. 

ஆக்கிரமிக்கப்பட்ட பாதையை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சேலம், நவ.17- சேலத்தில் பாதை ஆக்கிரமிப்பை உடன டியாக அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், சேலம் ஊராட்சி, செம் மண் திட்டு அருகில் உள்ள பாரவட்டம் பகுதி யில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுமார் ஐந்து தலை முறைகளாக அப்பகுதி பொதுமக்கள் செம் மண் திட்டு பேருந்து நிலையத்திலிருந்து 15 அடி அகலம் கொண்ட பாதையை பயன் படுத்தி வந்தனர். இந்நிலையில், பேருந்து நிறுத்தம் அருகே 5க்கும் மேற்பட்டோர் பாதையை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட் டியுள்ளனர். மேலும், கழிவுநீர் உள்ளிட்ட பொருட்களை அங்கு கொட்டியதால் பார வட்டம் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல முடி யாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து பல முறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித் தும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுடி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் செம் மண் திட்டு பேருந்து நிறுத்தம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமலைகிரி வருவாய் ஆய்வாளர், இப்பிரச்சனை குறித்து உரிய முறையில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.