districts

img

நீட் பயிற்சி மாணவியின் இறப்பில் சந்தேகம் ஆட்சியரிடம் பெற்றோர் முறையீடு

கோவை, ஏப்.26- கோவில்பாளையத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயின்ற மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், மையத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பெற்றோர் கோவை மாவட்ட ஆட் சியரிடம் முறையிட்டுள்ளனர். கோவை மாவட்டம், கோவில்பாளை யம் பகுதியில் தனியார் நீட் பயிற்சி மையத் தின் விடுதியில் (ஸ்ரீவாரி மெடிக்கல் அகா டமி) கடந்த ஏப்.1 ஆம் தேதி ஸ்வேதா (18), என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், காதல் விவகாரத்தால் மாணவி தற் கொலை செய்து கொண்டதாக கூறப்பட் டது. இந்நிலையில், மாணவியின் உயிரிழப் பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவி யின் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.  இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், தனது மகளின் உயிரிழப்பில் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த புகைப்பட ஆதாரமும் இல்லை. புலனாய்வு துவங்கும் முன்பே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அவரது அறை சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அகா டமி நிர்வாகத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்தவில்லை. ஆசிரியர் தவ றாக பாடம் நடத்தியதை சுட்டி காட்டி யதற்கு நிர்வாகம், சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி உள்ளனர். இதற்கு முன்பே ஒரு பெண் மர்மமான முறையில் உயிரி ழந்துள்ளார். இதேபோல் நிர்வாகத்தின் குறைகளை சுட்டிகாட்டியதால் தனது மகளை அச்சுறுத்தல் செய்துள்ளனர் என குறிப்பிட்டிருந்தனர். பின்னர், இதுகுறித்து மாணவியின் பெற்றோர் செய்தியாளர்களிடம் கூறுகை யில், மாணவியின் உயிரிழப்பு குறித்து காவல் துறையினர் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும். இதுதொடர் பாக ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை. இதற்கு முன்பே அந்த அகா டமியில் மாணவிகள் உயிரிழப்பு நிகழ்வு கள் நடந்துள்ளன. இதனால் எங்கள் மக ளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.