தாராபுரம், டிச.7- அமைப்பு சாரா நலவாரிய ஓய்வூ தியம் 4 மாதங்களாக நிறுத்தப்பட்டுள் ளதை உடனடியாக வழங்க வலியு றுத்தி தாராபுரத்தில் சிஐடியு சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தாராபுரம் தாலூகா பொது தொழிலாளர் சங்கம் சார்பில் தாரா புரம் அண்ணாசிலை முன்பு அமைப்பு சாரா நலவாரிய ஓய்வூதி யம் 4 மாதங்களாக வழங்காமல் நிலுவையில் உள்ளதை ஒரே தவ ணையாக உடனடியாக வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்குச் சங்கத் தின் பொருளாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தில் அமைப்பு சாரா நலவாரி யத்திலிருந்து 60 வயது நிறை வடைந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை முதியவர்களின் மருத் துவச் செலவிற்கு ஓரளவு உதவி யாக உள்ளது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதுகு றித்து நலவாரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் பட்டும் இன்று வரை ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதன் காரணமாக முதிய வர்கள் குறிப்பாக 70 வயதைக் கடந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில் தற் போது வழங்கப்பட்டு வரும் ரூ. 1000 நிறுத்தப்பட்டுள்ளது. எனவே உடடினயாக நிலுவையில் உள்ள உதவித்தொகையை ஒரே தவணை யாக வழங்கவும், மாதந்தோறும் தொடர்ந்து குறிப்பிட்ட தேதியில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என வலியுறுத்தி ஆவேச முழக் கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் என்.கனகராஜ், பி. பொன்னுச்சாமி, கி.மேகவர்ணன், செங்குட்டுவன், ஆ.மணியன் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.