உடுமலை, ஜூலை 3- உடுமலை தாலுகா ஈசல் திட்டு செட்டில் மென்ட் பகுதியில் சாலை அமைப்பதற்கான நில அளவை பணி புதனன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு மலைவாழ் மக்கள் சங்கத் தின் தலைவர் பெ.சண்முகம் தலைமையில், உடுமலை வனத்துறை அலுவலகம் முன்பு மலைவாழ் மக்கள் இரண்டு நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதை யடுத்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தளி பேரூ ராட்சி சார்பில் திருமூர்த்தி மலை முதல் குரு மலை வரை சாலை அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டது. அதன்பின் பணிகள் துவங்கப் பட்டு நடைபெற்ற போது, வனத்துறை அதிகா ரிகள் பல இடையூறுகளை ஏற்படுத்தியதால் பணிகள் தடைபெற்றது. இந்நிலையில், உடுமலை தாலுகா ஜல்லி பட்டி ஊராட்சி அருகில் இருக்கும் ஈசல் திட்டு மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வகையில் சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்கும் வகையில் புதனன்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த நில அளவீடு பணியில், தளி பேரூ ராட்சி துணை தலைவர் கோ.செல்வன், தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடை கமிட்டி உறுப்பி னர்கள் செந்தில்குமார், சுப்பிரமணி, வன காவலர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற் றனர்.