districts

img

அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

ஈரோடு, மார்ச் 3- ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சீரமைக்கப்பட வேண்டிய  பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா  ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 30 ஆண்டுகளுக்கு  மேலாக உள்ள கட்டடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு  செய்தார். அதில் பராமரிப்பு பணி மற்றும் வர்ணம் பூசுதல்,  முதிர்வு காலம் முடிந்த மருத்துவ இயந்திரங்கள், பயன்பாடில் லாத பழைய பொருட்களை கழித்து ஒதுக்குதல் மற்றும் மருத்துவமனையின் முகப்பு பகுதியில் செடிகளை வைத்து  அழகுபடுத்திட மருத்துவ அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.  மேலும் மருத்துவமனை, கல்லூரி, சமையல் கூடம்,  சலவை கூடம் உள்ளிட்ட பயன்பாட்டில் உள்ள கட்டடங் களை வர்ணம் பூசி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, தொடர் புடைய அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்  போது உதவி ஆட்சியர் (பயிற்சி) வினய் குமார் மீனா, கல்லூரி  முதல்வர் மரு.வள்ளி உட்பட மருத்துவர்கள் உடனிருந்த னர்.