உதகை, அக்.5- நீலகிரி வனப்பகுதியில், தாய் புலி நிலை குறித்து கண்டறிய 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக முது மலை புலிகள் காப்பக இயக்குநர் வெங்க டேசன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் 65 சதவிகிதம் வனப்பகுதியாக உள்ளது. இதில் நீலகிரி மற்றும் கூடலூர் வனக்கோட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்குறுத்தி தேசிய பூங்கா வாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வரு கிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட புலிகள் மற்றும் பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இதேபோல் இந்திய அளவில் புலிகள் அடர்த்தி அதிகமாக உள்ள 3ஆவது இடமாக முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இதேபோல் இந்த வனப்பகுதியில் அரிய வகையை சேர்ந்த பல்வேறு தாவரங்களும் உள்ளன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று முதுமலை புலிகள் காப்பகம் சீகூர் வன சரகத்தில் 2 புலி குட்டிகள், ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று நடுவட்டம் பகுதியில் ஒரு புலி, ஆகஸ்ட் 30ஆம் தேதி யன்று கார்குடி பகுதியில் ஒரு புலி, செப் டம்பர் 9ஆம் தேதியன்று எமரால்டு பகுதியில் 2 புலிகள், சின்ன குன்னூர் பகுதியில் 4 புலிக்குட்டிகள் இறந்தன. இதில் சின்ன குன்னூர் மற்றும் சீகூர் பகுதியில் இறந்த புலி குட்டிகளின், தாய் புலியின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலை யில் புலிகள் உயிரிழப்பு குறித்து, உயர் மட்ட குழு விசாரிக்க வேண்டும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் தனர். இந்தநிலையில், புலிகள் தொடர்ந்து உயிரிழந்தது குறித்து நேரில் விசாரிக்க டேராடூனில் இருந்து தேசிய புலிகள் ஆணைய குழுவினர் கடந்த வாரம் வந்து ஆய்வு செய்தனர். அப்போது வனத்துறை புலிகள் இறப்பு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு விளக்கம் பெற்றுச் சென்றனர். இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் கூறுகையில், பொதுவாக வனப்பகுதியை பொருத்தவரை 40 சதுர கிலோ மீட்டருக்கு ஒரு புலி வாழ்ந்து வருகிறது. ஆனால், முதுமலை புலிகள் காப்பகத்தில், புலிகளின் எண்ணிக்கை அதி கரித்து இருப்பதால் 10 முதல் 15 சதுர கிலோ மீட்டருக்கு ஒரு புலி வாழ்ந்து வருகிறது. இதேபோல் புலிகள் நடமாட்டம் குறித்து அறிய நீலகிரி மற்றும் முதுமலை வனப் பகுதியில் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் இதுவரை நடந்த கணக்கெடுப்பில் பதிவாகாத 7 புலிகள் பதிவாகியுள்ளன. இதில் 3 பெண் புலிகளாகும். இந்த புலி களின் எச்சம் உள்ளிட்ட பல்வேறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக ஐதராபாத் மற்றும் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த முடிவு விவரங்கள் தெரிவ தற்கு 45 நாட்கள் ஆகும். மேலும், தாய் புலி நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக் கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மராட்டிய மாநிலத்தில் 8 புலி குட்டிகள் இறந்துள்ளன. இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ கத்தில் புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தியாவில் மராட்டிய மாநிலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி களில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார்.