பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கே.ஈஸ்வர சாமியை ஆதரித்து, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்ட மன்றத் தொகுதிக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.தொகுதி பொறுப்பு அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கழக தலைமை நிலையச் செயலாளர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், மாவட்ட கழகச் செயலாளர், தலைமை கழக தொகுதி பொறுப்பாளர், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி குழு ஒருங்கிணைப்பாளர் கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.