districts

img

உதகை: ஏப்ரல், மே மாதங்களில் 7 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

உதகை, ஜூன் 1- உதகையில் நடைபெற்ற மலர் கண்காட்சி, கோடை விடுமுறையை கொண்டாட கடந்த 2 மாதங்களில் 7 லட்சத்து  32 ஆயிரத்து 465 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.  சுற்றுலா நகரமான உதகைக்கு நாள் தோறும் வெளிமாநி லம், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா  பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக, ஏப்ரல் மற்றும் மே  மாதங்களில் உதகையின் அழகை கண்டு ரசிக்க பல லட்சம்  சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.  ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால்  சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந் தது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. இதனால், தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத்துறை உள்பட பல்வேறு அரசு துறை களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வருவாய் இழப்பு  ஏற்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்ததை  அடுத்து இம்முறை சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறை யான ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணி கள் இங்கு குவிந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 600 சுற்றுலா பயணிகளும், மே மாதத்தில் 5  லட்சத்து 10 ஆயிரத்து 865 சுற்றுலாப்பயணிகளும் உதகை  வந்துள்ளனர்,