நாமக்கல், ஏப்.1- பள்ளிபாளையம் அருகே நகராட்சி துவக்கப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், அப்பள்ளிக்கு தேவை யாக கல்வி உபகரணங்களை வழங்கினர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், கண்டிபுதூர் பகு தியில், நகராட்சி துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளிக்கு ஜெராக்ஸ் இயந் திரம் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் வேண்டு மென பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இத னையடுத்து அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் கள், பள்ளி மேலாண்மை குழுவினர், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் சுமார் ரூ.22 ஆயிரம் மதிப்பில் ஜெராக்ஸ் இயந்திரம், ரூ.15 ஆயிரம் மதிப்பில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவற்றை வழங்கினர். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் விஜயகுமார், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.