சேலம், ஜன.7- ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கை களைக் கண்டித்து நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை வெற் றிகரமாக்குவோம் என சேலத்தில் நடைபெற்ற அனைத்து தொழிற் சங்க மாநாட்டில் சூளுரைக்கப்பட் டது. மோடி தலைமையிலான ஒன் றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கை களை கண்டித்து வரும் பிப்ரவரி மாதம் 23,24 ஆகிய தேதிகளில் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் இந்த வேலைநிறுத் தத்தை சேலம் மாவட்டத்தில் வெற்றி பெறச் செய்யும் வகையில் கோரிக்கை விளக்க மாநாடு சேலம் ஜி.வி.என். திருமண மண்டபத்தில் நடைபெற் றது. இம்மாநாட்டிற்கு சிஐடியு சாலைப் போக்குவரத்து சங்க தலை வர் எஸ்.கே.தியாகராஜன், தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் பொன்னி. பழனியப்பன், எச்எம்எஸ் மாவட்ட தலைவர் மணி (எ) மாதேஸ், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் எம். முனுசாமி, ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் டி. வடமலை, ஏஐசிசிடி யுஐ மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், தொழிலாளர் நல சட்டங் களை சீர்குலைப்பதை கைவிட வேண்டும். தேசிய பணமாக்கல் திட்டத்தை ரத்து செய்திட வேண் டும். பெட்ரோலிய பொருட்களின் மீதான வரிகளை குறைத்து விலை வாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த மாநாட்டில் சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு, எச்எம்எஸ் மாநில செயல் தலைவர் எம்.சுப்ர மணியபிள்ளை, ஏஐடியுசி கட்டிட சங்க துணை பொதுச்செயலாளர் என்.செல்வராஜ், ஐஎன்டியு மாநில துணைத்தலைவர் ஆர்.சுவர்ண ராசு, ஏஐசிசிடியு மாநில செயலாளர் எஸ்.சுப்ரமணி, சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், தலை வர் பி.பன்னீர் செல்வம், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கட பதி, எ.கோவிந்தன், கட்டுமான சங்க செயலாளர் சி.கருப்பண்ணன் உள்ளிட்ட அனைத்துசங்க நிர்வாகி கள், உறுப்பினர்கள் உள்ளிட்டு ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர்.