districts

img

சூலூர்: வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை, மார்ச் 1- சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஊரக பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம் படுத்துவதன் மூலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் சமூக பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்திட இயலும். மேலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, அடிப் படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறைக்கு பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை வகுத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தி வருகின்றது.  அதன்படி, கோவை மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பட்டணம் ஊராட்சியில் ரூ.96.07 லட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட் டத்தின் மூலம் நாகமநாயக்கன் சாலை முதல் காடுகுட்டை வரை 2 ஆயிரத்து 215 மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை அமைக் கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் செவ்வாயன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.  அப்போது குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் ஜல்லி, மணல் மற்றும் கலவைகள் முறையாக உப யோகப்படுத்தப் பட்டிருப்பதை, சாலையினை துளையிட்டு பரிசோதித்து பார்த்தார். அதனைத்தொடர்ந்து, காடுகுட்டை ஊராட்சியில் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத் தினை தூர்வாரும் பணியினையும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாகமநாயக்கன்பாளையம் சத்யா நகர் அருகில் ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ள தையும் ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். மேலும், பட்ட ணம் ஊராட்சியில் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ள நூலகக் கட்டிடத்தையும், சம் பூர்ண கிராம வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் புதுப்பிக் கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவி குழு பயிற்சி மையத்தை யும், ரூ.17.92 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்க  தொட்டி பணிகளையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மேற்கொண்ட பணிகளை விரைவாகவும், தர மாகவும் அமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.