கோவை, ஆக.8- சூலூர் விமானப்படை நிலைய தலைமை பொறுப்பை ஏர் கொமடோர் விவர்த் சிங் செவ்வாயன்று ஏற்று கொண்டார். ஜூன் 1995 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையில் நியமிக்கப்பட்ட ஏர் கொமடோர் விவர்த் சிங், விமானிகள் பயிற்றுவிப்பாளராவார். 4 ஆயிரம் மணி நேரத்திற்கும் மேலாக இந்திய விமானப்படை விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர், ஒரு சோதனை விமானி ஆவார். போர் விமானங்கள், போக்குவரத்து மற்றும் பயிற்சி விமானங் களின் பல வகைகளை இயக்கிய அனுபவம் இவருக்கு உண்டு. கடக்வாஸ்லாவில் உள்ள புகழ்பெற்ற தேசிய பாது காப்பு அகாடமி (NDA) மற்றும் வெலிங்டனில் உள்ள பாது காப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் (DSSC) முன்னாள் மாணவர். ஏர் கொமடோர் விவர்த் சிங், இந்திய விமானப் படையின் முதன்மையான ஒரு போர் படைப் பிரிவின் தலைவ ராக இருந்த அனுபவமும் உண்டு. தில்லி விமான தலைமை யகத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், விமானங்களின் சோதனை விமானியாக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானமான தேஜஸ் (Tejas) விமானத் தயாரிப்பில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்நிலையில், சூலூர் விமானப்படை நிலைய தலைமை பொறுப்பிற்கு இவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் செவ்வாயன்று அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.