சூலூர், டிச.23- சூலூர் அருகே ராணுவ தளவாட தொழிற் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசா யிகள் நடத்தி வரும் காத்திருப்பு போராட் டத்தில் பஞ்சாப் விவசாயி கோல்டன் சிங் கலந்து கொண்டார். கோவை மாவட்டம், சூலூர் அருகே ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்க அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, வாரப்பட்டி பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில ஈடுபட்டு வருகின்றனர். 9 ஆவது நாள் போராட்டமான வியா ழனன்று, தில்லியில் நடைபெற்ற விவசா யிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட பஞ் சாப்பை சேர்ந்த கோல்டன் சிங் கலந்து கொண் டார். அப்போது விவசாயிகளிடம் அவர் பேசுகையில், தங்களது நியாயமான போராட் டத்திற்கு அகில இந்திய கிசான் சங்கம் துணை நிற்கும். போராட்டம் வெற்றி பெற வேண்டும். இதற்காக தேவைப்பட்டால் எங்களது சங்கத் தைச் சேர்ந்தவர்களை வட மாநிலங்களில் இருந்து அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு இதுபோன்ற தொழிற்சாலைகளுக்கு என நிலங்களை கைப்பற்றி, அதை அதிக விலைக்கு கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு விற்று வருவது வாடிக்கையாகிவிட்டது. அதை விவசா யிகள் வன்மையாக கண்டிப்பதாகவும், இது போன்ற விவசாய நிலங்களை கையக படுத்துவதற்கு அரசு முனைப்பு காட்டக் கூடாது, என்றார்.