கோவை, டிச.25- மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியே உதகை செல்லும் கொண்டை ஊசி வளைவுகளில் ஏற் படும் விபத்துகளை குறைக்கும் வகை யில் நெடுஞ்சாலைதுறையின் புதிய தொழில் நுட்ப முறை தற்போது அறி முகப்படுத்துப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் இருந்து குன்னூர் வழியே உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து முக்கி யத்துவம் பெற்ற மலைப்பாதையா கும். உள்ளூர் மக்களின் போக்கு வரத்து மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நீலகிரி வரும் சுற்றுலா வாகனங்கள் இச்சாலை வழி யாகவே பயணிக்கின்றன. இம்மலைப் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் ஓட்டுநர்களுக்கு பார்வை தடைபடும். இதனால் விபத்துக் களும், போக்குவரத்து நெரிசலும் ஏற் படும். இப்பிரச்சனையை தீர்க்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு எச்ச ரிக்கை செய்யும் வகையில் கொண்டை ஊசி வளைவுகளில் புதிய தொழில் நுட்ப முறை தற்போது அறிமுகப் படுத்துப்படுள்ளது.
இதன்படி, கொண்டை ஊசி வளைவுகளின் இரு முனைகளிலும் நவீன உணர்வு கரு விகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு வாகனம் இந்த உணர்வு கருவியினை கடக்கும் வினாடியே இக்கருவி அனைவரும் எளிதில் காணும் வகை யில் மேலே பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பானுக்கு தகவல் அனுப்பி, அதை அறிவிக்க செய்கிறது. அதனை தொடர்ந்து ஒலிப்பானில் இருந்து எதிரே வாகனம் வருகிறது கவனமாக செல்லவும் என தமிழிலும், ஆங்கி லத்திலும் அறிவிக்கின்றது. அதே நேரத்தில் ஒலிப்பான் அருகே பொருத்தப்பட்டுள்ள டிஜிட் டல் அறிவிப்பு பலகையிலும் இந்த வாசகங்கள் சிவப்பு நிறத்தில் ஒளி ரும். இந்த நவீன தொழில்நுட்ப கருவி சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற் காக சோலார் தகடுகளும் பொருத் தப்பட்டுள்ளது. வனத்தை ஊடுருவி செல்லும் இம்மலைப்பாதையில் இக்கருவிகளை பொருத்தியதன் மூலம் வாகன விபத்துக்கள் தடுக்கப் படுவது மட்டுமின்றி வாகனங்களின் வேகம் கட்டுப்படுத்துவதால் சாலையை கடக்க முயலும் வன உயி ரினங்கள் அடிபடும் சம்பவங்களும் குறைய வாய்ப்புள்ளது.