districts

img

திமுக நிர்வாகி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

சேலம், மார்ச் 21- குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து வருபவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக நிர்வாகி  குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொ லைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், அயோதியபட்டினம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வந்து கையில் வைத்தி ருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், அவர்கள் மீது நீரை ஊற்றி அணைத்து, சமா தானப்படுத்தி அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட னர். அப்போது நாகராஜ் கூறுகையில், நான் அம்மாபேட்டை  பகுதியில் ஐயங்கார் பேக்கரி கடை நடத்தி வருவதாகவும்,  திமுக ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளராகவும்  உள்ளேன். இந்நிலையில், அயோத்தியபட்டினம் திமுக ஒன் றிய பொறுப்பாளர் விஜயகுமார் என்பவர், திமுக தலைமை  கழகத்துடன் நெருங்கிய பழக்கம் உள்ளது என்றும், சட்டமன்ற தேர்தலின் போது ஓமலூர், ஏற்காடு ஆகிய இடங்களில் சீட்டு வாங்கித் தருவதாகக்கூறி பல லட் சம் ரூபாய் வாங்கியுள்ளார்.  இந்நிலையில், தன்னிடம் 67 லட்சம் ரூபாய் கொடுத்த தாகவும், அதனைத் திருப்பி தர சொல்லி என்னையும், எனது மனைவி மற்றும் தாய், இரண்டு குழந்தைகளையும் வீட்டிற்கு வந்து அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் செய்து வரு கிறார். மேலும், கடந்த 4 நாட்களுக்கு முன்பு எனது கடையை  பூட்டி சாவியை எடுத்துச் சென்றுவிட்டார். இதனால் வாழ்வா தாரம் இன்றி, மிகவும் வேதனை அடைந்து வருவதாகவும், இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, திமுக பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என நாகராஜ் தெரிவித்தார். இதுகுறித்து காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.