districts

img

கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், அக்.30- கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயி ரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னி தனியார் சர்க்கரை ஆலை  முன்பு கரும்பு வெட்டும் தொழிலா ளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கரும்பு விவசாயிகளுக்கு  கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க  வேண்டும் என்கிற தேர்தல் வாக் குறுதியை நிறைவேற்ற வேண்டும்.  கரும்பு வெட்டும் தொழிலாளர்க ளுக்கு பாதுகாப்புடன் கூடிய சீருடை, ரப்பர் ஷூ இலவசமாக வழங்க வேண் டும். விபத்து ஏற்படுகையில், மருத் துவ செலவினத்திற்கும் ஆலை நிர் வாகம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். கரும்பு வெட்டும் தொழி லாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். உயிரிழப்பு ஏற்பட் டால் அந்த குடும்பத்திற்கு ரூ5 லட்சம்  நிவாரண உதவி தமிழக அரசு வழங்க  வேண்டும். முத்தரப்பு பேச்சு வார்த்தை மூலமாக தொழிலாளர் கோரிக்கைகளை தீர்வு காண வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  பள்ளிபாளையம் அருகே உள்ள  ஓடப்பள்ளி பொன்னி சர்க்கரை ஆலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், கரும்பு வெட்டும் தொழிலா ளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி.துரைசாமி, சிஐடியு தொழிற்சங்க மாவட்டத் தலைவர் எம்.அசோகன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றியச் செயலாளர் ஆர்.ரவி, கரும்பு வெட்டும் சங்கச் செயலாளர் குரு சாமி, மாவட்டப் பொருளாளர் கோவிந் தசாமி உள்ளிட்டோர் உரையாற்றி னர். ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.