நாமக்கல், நவ.21- மோகனூரிலுள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டிற் கான கரும்பு அரவையை வியாழனன்று ராஜேஸ்குமார் எம்.பி., ஆட்சியர் ச.உமா ஆகியோர் துவக்கி வைத்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூரில் செயல்பட்டு வரும் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவையை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என்.ராஜேஸ்குமார், ஆட்சியர் ச.உமா ஆகியோர் வியாழனன்று துவக்கி வைத் தனர். இதன்பின் ராஜேஸ்குமார் கூறு கையில், நடப்பு அரவைப் பருவத்திற்கு 396 ஏக்கர் நடவு கரும்பும், 2053 ஏக்கர் மறுதாம்பு கரும்பும் என மொத்தம் 2449 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள் ளது. மேற்கண்ட பதிவு பரப்பிலிருந்து ஏக்கர் ஒன்றுக்கு 36.75 டன்கள் சராசரி விளைச்சல் மதிப்பீடாக கணக்கீடு செய் யப்பட்டு மொத்தம் 90 ஆயிரம் டன்கள் பதிவு கரும்பும், ஆலையின் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் உள்ள பதிவில் லாக் கரும்புகளை நேரடி பதிவு மூலம் பதிவு செய்து அதன் மூலம் 10 ஆயிரம் டன்களும் என மொத்தம் 2024 - 25 அர வைப் பருவத்தில் மொத்தம் ஒரு லட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த ஆலை 2023-24 கரும்பு அரவைப் பருவத்தில் 1.65 லட்சம் டன்கள் 7.77 சதவிகித சர்க்கரை கட்டு மானத்தில் அரவை செய்துள்ளது. அரவை செய்த கரும்புக்கு ஒன்றிய அரசு அறிவித்த கரும்பு கிரயத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.2919.75 வீதம் மொத் தம் ரூ.48.18 கோடி அங்கத்தினர்களுக்கு நிலுவையின்றி ஒரே தவணையில் வழங்கப்பட்டுள்ளது, என்றார். இந்நி கழ்ச்சியில் அட்மா குழுத்தலைவர் நவ லடி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் க.ரா. மல்லிகா மற்றும் விவசாயிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.