தருமபுரி, ஆக.10- சர்க்கரை ஆலை தொழிலாளர்க ளுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பினர் உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு இரண்டு விதமான ஊதி யங்கள் வழங்கப்படுகிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரி யான ஊதியம் வழங்க வேண்டும். சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, அரசு ஊழியர் களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தினக்கூலி தொழிலாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும். விவசாயிகளுக்கு கரும்பு டன் னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க் கரை ஆலை வளாகம் எதிரே உண் ணாவிரதப் போராட்டம் நடைபெற் றது. இந்த போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் செய லாளர் சி.சின்னதுரை தலைமை வகித் தார். இதில் அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பின் தலைவர் ஆர். வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.