districts

img

தாராபுரம் பூக்கடை கார்னர் பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை நீரால் அவதி

தாராபுரம், ஜன.3-  தாராபுரம் பூக்கடை கார்னர் பகுதியில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள் ளாகியுள்ளனர்.  தாராபுரம் நகரின் மையான பகுதியே பூக்கடை கார்னர் ஆகும். இந்த பகுதியில் தான் துணிக்கடை, மளிகைக்கடை, மருந் துக்கடை உள்ளிட்ட முக்கியமான மொத்த  வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகி றது. மேலும் தாராபுரம் வட்டாரத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் பொது மக்கள்,  பள்ளி, கல்லூரி செல்லும் மாண வர்கள் நகரின் மையபகுதியான பூக்கடை கார்னல் பகுதியை கடந்தே பள்ளி, கல்லூரி கள், பேருந்து நிலையம், தாலுகா அலுவ லகம், நகராட்சி அலுவலகம், வங்கிகள் உள் ளிட்ட முக்கியமான இடங்களுக்கு செல்ல முடியும். இவ்வாறு நகரின் பிரதான பகுதி யாக உள்ள பூக்கடை கார்னர் பகுதி எப்போ தும் பரபரப்பாகவும், போக்குவரத்து நெரி சல் மிகுந்தும் காணப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பூக் கடை கார்னர் பகுதியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் முறையில்லாமல் கட்டப்பட்ட சாக்கடையில் அடைப்பு ஏற் பட்டு மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சேறும், சகதியுமாக மாறி தேங்கி நின்ற தால், அப்பகுதியை பொதுமக்கள் கடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  மழை நின்ற பிறகும் சாக்கடை அடைப்பு எடுக்கப்படாத தால்  கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதி யில் சாக்கடை நீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் துர்நாற்றத்துடன் குப்பை கழிவுகள் சாலையில் குவிந்து சுகா தார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன்காரண மாக, வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.  இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி வணிக நிறுவனத்தை சேர்ந்த வர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவித்தும் இன்றுவரை நடவடிக்கை எடுக் காமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி  வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி யுள்ளனர்.