நாமக்கல்,பிப்.1- கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளித்த நபர் திடீரென உயிரி ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள் ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு, சுற்றுலா வருப வர்கள் அங்குள்ள ஆகாய கங்கை நீர் வீழ்ச்சிக்கு சென்று குளித்து மகிழ்வர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம், பெங்களூரு விஜயா நகரை சேர்ந்தவர் பரத் (வயது 28). தனது நண்பர்கள் 4 பேருடன் கொல்லி மலைக்கு சுற்றுலா வந்தார். அங்கு அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு, பின்னர் ஆகாய கங்கை நீர் வீழ்ச்சிக்கு சென்று குளித்தனர். குளித்துவிட்டு திரும்பும் போது, பரத்துக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அங்குள்ள நுழைவு வாயில் அருகே வந்து கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு, 108 ஆம்புலன்ஸ் அங்கு சென்று மயங்கி கிடந்த பரத்தை மீட்டு சிகிச்சைக்காக செம்மேடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், பரத்தின் உடலை கைப்பற்றி சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர். பரத் இறந்தது குறித்து அவருடைய குடும்பத்தி னருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுற்றுலா வந்த பெங்களூரு வாலிபர் திடீ ரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.