districts

img

எட்டு ஆண்டுகளில் 13.60 லட்சம் மரக்கன்றுகள் நட்ட வெற்றி அமைப்புக்கு பசுமை முதன்மையாளர் விருது

திருப்பூர், ஜூன் 7- தமிழக அரசு அறிவித்த 2021 ஆம் ஆண் டிற்கான பசுமை முதன்மையாளர் விருது  திருப்பூர் வெற்றி அமைப்பிற்கு கிடைத்துள் ளது. வெற்றி அமைப்பு கடந்த எட்டு ஆண்டுக ளாக ’வனத்துக்குள் திருப்பூர்’ என்ற இயக் கத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. சூழலியலில் முக்கியமான பணியாற்றி வரு வதற்காக இந்த விருது வழங்கப்பட்டு உள் ளது. 2015 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்  நினைவாக அவரின் கனவுகளில் ஒன்றான  பசுமை இந்தியாவை உருவாக்கும் பணி யாக வனத்துக்குள் திருப்பூர் பணியை இந்த  அமைப்பு முன்னெடுத்தது. இது அப்துல் கலாமுக்கு செலுத்தும் சிறந்த அஞ்சலி யாக இருக்கும் என்ற உணர்வுடன் இப்பணி  மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் மாவட் டத்தை பசுமையாக்கும் திட்டமாகவே வனத்துக்குள் திருப்பூர் முன்னெடுக் கப்பட்டது. மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது மட் டுமே நோக்கம் என தொடங்கப்பட்ட இப் பணி எட்டாண்டுகளில் எவ்வித தடம்  மாறாமல்லும் அதே தன்மையில் தொடர்ந்து  பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 8  ஆண்டுகளில் 13 லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு உள்ளன. நகரமயமாக்கல் மற்றும் தொழில்மய மாக்கல் காரணமாக இழந்த உயிர் சங்கிலி யின் கண்ணிகள் மீட்கப்பட்டு இணைக்கப் பட்டு சூழலியல் பெருமளவில் மேம்பட்டுள் ளது என்ற இந்த அமைப்பைச் சேர்ந்த குமார் துரைசாமி குறிப்பிடுகிறார். மேலும், வெற்றி  அமைப்பிற்கு அளிக்கப்படும் ஒவ்வொரு ரூபாய் நன்கொடையும் மிக சரியான விதத் தில் செலவிடப்படும் என்கிற கொடை யாளர்களின் நம்பிக்கை காப்பாற்றப்படு கிறது. இம்மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்பையும் உடன் இணைத்து பயணிப் பதும், போட்டியும், பொறாமையும் இலக்குகளையும் நோக்கத்தையும் சிதைக் கும்  தற்கால சூழலில்,  அப்படிப்பட்ட எண்ணமே எழாமல் யாவரும் சமம் என்ற நிலைப்பாட்டுடன் இதன் தன்னார்வலர் குழு செயல்பட்டு வரு கிறது.

மாவட்டம் முழுவதும் பயணித்து பணி களை முன்னெடுக்கும் கள மேலாளர்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் நர்சரி மற்றும்  கள பணியாளர்கள் குழு ஆகியவற்றைச் சேர்ந்தோர் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர். தமிழக அரசு தொடர்ந்து பல ஆண்டுக ளாக கொடுத்துவரும் ஆதரவு, குறிப்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம், தமிழக வனத் துறை, இந்திய வன மரபியல் மற்றும் மரப் பெருக்கு நிறுவனம், தமிழக அரசின் மேட் டுப்பாளையம் வன கல்லூரி, மத்திய மற்றும்  மாநில அரசு பணிகளில் உள்ள இயற்கை மீட் டெடுப்பில் ஆர்வமுள்ள பல உயர் அதிகாரி கள், மாவட்ட அளவில் பொறுப்பு வகிக்கும்  வேளாண் துறை அதிகாரிகள், தற்சமயம் இத்திட்டத்தை கிராமப்புறங்களில் செயல் பாட்டுக்கு கொண்டு வந்துள்ள பல உள் ளாட்சி அமைப்புகள்  என பலரும் வெற்றி அமைப்புக்கு விருது கிடைக்க காரணமானவர்களாக உள்ளனர் என்றும் குமார் துரைசாமி கூறியுள்ளார். தங்களின் காலி நிலங்களில் மரக்கன்று களை நட்டு வளர்க்க முன்வந்த வேளாண் மக்கள்,

வனத்துக்குள் திருப்பூர் மரக்கன்று கள் வளர்ப்பை தங்களின் உரிமையாக, தங் களின் பெருமையாக கருதும் திருப்பூர் மாவட்டத்தில் வாழும் அனைவருக்கும் உரித்தானது.  தொடர்ந்து இந்த இயற்கை பணிகள் முன்னெடுக்கப்படும் என்கின்ற நம்பிக் கையை மட்டும் இது விதைக்கவில்லை, இத் திட்ட செயல்பாடுகளால் ஒவ்வொருவரின் வாழ்வியல் பார்வைகள் மாறியுள்ளன. விருதுகள் இந்த அமைப்பின் பயண வேகத்தை மேலும் உற்சாகத்துடன் முன்னெ டுக்க உதவும், அதையும் கடந்து நம் முன் னோர்கள் நமக்களித்த பூமியை வருங்கால  சந்ததிகளும் வாழத்தகுந்த அளவில் விட்டு  செல்ல வேண்டும் என்ற உணர்வுடன், இயன்ற வரை இப்பணியை மேலும் முன்னெ டுப்போம் என்றும் வெற்றி அமைப்பின் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் முக்கிய  அங்கம் வகித்து வரும் குமார் துரைசாமி கூறி யுள்ளார்.