districts

img

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள்

கோவை, மார்ச் 15 மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு, வீடுகளை ஒதுக்கித்தர வேண்டும் என தொடர்ந்து பி.ஆர்.நடராஜன் எம்பி., மாவட்ட நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இத னையடுத்து, சம்பந்தப்பட்ட மக்க ளுககு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியம் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் கோவை மாவட்டத்தில் கண மழை பெய்தது. இதில், வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள உழைப்பாளர் வீதியில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் வெள்ளநீர் சூழ்ந் தது. இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன் நேரில் பார் வையிட்டு பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ஆறுதல் கூறினார். அதோடு,  அவர்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் ஒதுக்கீடு செய்திட நடவடிக்கை கள் எடுப்பதாகவும் உறுதி அளித் தார்.  அதன்படி, மாவட்ட நிர்வாகத் தோடு பேசி தொடர் முயற்சிகள்  எடுக்கப்பட்டதை அடுத்து, 15  குடும்பங்களுக்கு பெரியநாயக் கன்பாளையம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை பெற்றதும், சம்பந்தப்பட்ட மக் கள், காந்திபுரத்தில் உள்ள பி.ஆர். நடராஜன் எம்பி., அலுவலகத்திற்கு வந்து எம்பியை நேரில் சந்தித்து  நன்றி தெரிவித்தனர். மேலும், வீடு  பெற்றமைக்கான ஆணையின் நகலை எம்பியிடம் கொடுத்து,  பின்னர் அதனை பெற்றுக்கொண் டனர். இதுகுறித்து அம்மக்கள் கூறு கையில், வெள்ளம் வந்தபோது, எங்களின் துயரத்தை பகிர்வதற்கு கூட யாரும் இல்லாத நிலை இருந் தது. அப்போது, நாங்கள் பாதிக்கப் பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதையறிந்து நேரிடையாக நமது கோவை எம்பி சார் வந்து  எங்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், உங்களுக்கு அரசின் குடி யிருப்பில் வீடு வாங்கித்தருவதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன் கவ லைப்படாதீர்கள் என்றார். சொன்னது போலவே தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதி காரிகளிடம் எங்களை அழைத்த  சென்று தொடர்ந்து முயற்சி மேற் கொண்டார். இதன்விளைவாகவே எங்களுக்கு இப்போது நிரந்தர  வீடு கிடைத்துள்ளது. எங்களைப் போன்ற ஏழைஎளிய மக்கள் மீது கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், அதன் பிரதிநிதிகளுக்கும்தான் எங்கள் வலி புரியும். இப்போதும் எங்களின் வலியை உணர்ந்து வீடுகளை பெற்றுத்தந்த பி.ஆர்.நடராஜன் எம்பிக்கு நன்றி சொல் லவே இங்கு வந்தோம் என்றனர்.  முன்னதாக கோவை மாவட் டக்குழு அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவசாமி உள்ளிட்டோர் உடனிருந் தனர்.