districts

img

பாண்டியாறு - மோயாறு திட்டம் கனிமொழி எம்.பி.,யிடம் மனு வழங்கல்

கோபி, பிப்.12- பாண்டியாறு - மோயாறு திட்டம் குறித்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம், மனு வழங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவு ரைப்படி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற் காக திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையிலான 11பேர் கொண்ட குழு, கடந்த 5ம் தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய  நகரங்களுக்கு சென்று கோரிக்கைகளை பெற்று வருகின்றனர். அந்த வகையில், திருப்பூர், ஈரோடு, கரூர்  நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோரிக் கைகளை, குழுவின் தலைவர் கனிமொழி பெற்று வருகிறார்.  இந்நிலையில், ஈரோடு, கரூர், திருப்பூர்  மாவட்டங்களில் 4.5 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாண்டியாறு -  மோயாறு திட்டத்தை செயல்படுத்த வேண் டும். பவானிசாகரில் விவசாய சம்பந்த மான பலதுறைகள் உள்ளன. வேளாண் பல்கலைகழகத்துடன் இணைத்து வேளாண் கல்லூரி அல்லது வேளாண் ஆராய்ச்சி மையத்தை துவக்க வேண்டும். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பூக்கள்  அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு வருகி றது. இங்கு இருந்து பல்வேறு பகுதிக ளுக்கு பூக்கள் விற்பனைக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. எனவே, இதனை கருத்தில் கொண்டு சத்தி யமங்கலத்தில் வாசனை திரவியம் தொழிற் சாலை ஒன்றை நிறுவிட வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி, திமுக விவசாய அணி மாநிலச் செய லாளர் ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் இணைச்  செயலாளர் கள்ளிப்பட்டி மணி உள்ளிட்ட பலர் கனிமொழி எம்.பி.,யிடம் மனு வழங்கி னர்.