திருப்பூர், பிப்.18 - பல்லடம் ஒன்றியம் மேற்கு பகுதி ஊராட்சிகளில் நிலவும் குடிநீர் பிரச் சனை குறித்து கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் சனியன்று ஆய்வுக் கூட்டம் கோவை எம்பி அலுவலகத் தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பருவாய், கரடிவாவி, மல்லேகவுண் டம்பாளையம், கே. கிருஷ்ணாபுரம், புளியம்பட்டி, அனுப்பட்டி, சித்தம்ப லம், வடுகபாளையம் புதூர், செம்மி பாளையம், அய்யம்பாளையம், கோடாங்கிபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு தற்போதைய மக் கள் தொகைக்கு ஏற்ப அத்திக்கடவு குடிநீர் முறையாக வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகங்கள் குடிநீர் தேவையை சமாளிக்க கடும் நெருக் கடிக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்ட மும் மிகவும் குறைந்து போய் உள்ள தாலும், புதிய குடியிருப்புகளும் வேகமாக இந்த பகுதிகளில் வளர்ந்து வருவதால், தண்ணீர் தேவையை சமாளிக்க முடியாமல் திணறுகின் றன. எனவே குடி நீரை முறையாக எல்லா ஊராட்சிகளுக்கும் வழங்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரி யத்திடம் வலியுறுத்தப்பட்டது. மீண் டும் குடிநீர் வழங்கல் துறையின் உயர் அதிகாரிகளோடு பிப். 21 புதன் அன்று சந்தித்து பேசுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் குடிநீர் வடிகால் வாரிய பில்லூர் குடிநீர் திட்ட செயற் பொறியாளர் ஜான்சன், உதவி செயற் பொறியாளர் விஜயலட்சுமி, பல்ல டம் ஊராட்சி ஒன்றிய தலைவர் தேன் மொழி, திமுக பல்லடம் மேற்கு ஒன் றிய செயலாளர் சு. கிருஷ்ணமூர்த்தி, புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலை வர் உத்தமராசு, பருவாய் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், கே. கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் படையப்பா.மூர்த்தி, சிபிஎம் பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர், பரமசிவம், மாதர் சங்க பொறுப்பாளர் ஜெ.சித்ரா உள் ளிட்டோர் பங்கேற்றனர்.