கோவை, பிப்.9- ஜிசிடி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு பணிகளை தேர்தல் பார்வையாளர் ஹர் சஹாய் மீனா ஆய்வு மேற் கொண்டார். கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் வருகின்ற பிப்.1 ஆம் தேதியன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர் தல் நிறைவு பெற்றதும், பொது மக்கள் வாக்களித்த மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கோவை தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரி யில் வைத்து பூட்டப்படும். அங்கு பாதுகாப்பு பணியில் காவல்துறை யினர் ஈடுபட உள்ளனர். அவ்வாறு மின்னணு வாக்கு பதிவு இயந்தி ரங்கள் வைக்கப்படும் இடங்கள், மற்றும் வாக்கு எண்ணிக்கை நடை பெறும் இடங்களை, தேர்தல் பார் வையாளர் ஹர் சஹாய் மீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார். அப்பொழுது, வாக்கு எண் ணும் மையமான கோவை ஜிசிடி கல்லூரியில் பாதுகாப்பு பணிகள் எவ்வாறு உள்ளது. வாக்கு சீட்டு முகவர்கள் எங்கு அமர வேண்டும். கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் எங்கு அமர வேண்டும். அவர்க ளுக்கு தேவையான அனைத்து ஏற் பாடுகளும் எந்த நிலையில் உள் ளது என்பது குறித்தும் அதிகாரிகளு டன் ஆலோசித்து ஆய்வு செய் தார். மேலும், இங்கு அமைக்கப்பட் டுள்ள கட்டுப்பாட்டு மையம், வாக்கு எண்ணும் மையம் ஆகியவற்றை யும் பார்வையிட்டு ஆய்வு செய் தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோ பால் சுன்கரா, மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.