அவிநாசி, செப்.22 – அவிநாசி அருகே கருவ லூர் அரசு மேல்நிலைப் பள் ளியில் வகுப்பறை இன்றி மாணவர்கள் மரத்தடியில் படிக்கும் அவல நிலை உள் ளது. திருப்பூர் மாவட்டம் அவி நாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் ஊட்டி செல் லும் சாலையில் அரசு மேல் நிலைப் பள்ளி அமைந் துள்ளது. இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இப்பள்ளியில் சுமார் 23 வகுப்பறைகள் மட்டுமே இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலகட்டத் திற்குப் பிறகு மாணவர்கள் அரசுப் பள்ளி யில் அதிகளவு சேர்ந்துள்ளனர். தற் போதைய நிலையில் 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இப்பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்கள் எண் ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் இங்கு இல்லை. எனவே மாணவ மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்ற னர். கருவலூர் பள்ளி நிர்வாகம் சார்பில் மக்கள் பிரதிநிதிகள் உட்பட சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது குறித்து அப்ப குதியைச் சேர்ந்த பெற்றோர்கள், சமூக அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு, மாணவ, மாணவியர் எண்ணிக் கைக்கு ஏற்ப போதிய வகுப்பறைகள் ஏற்ப டுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.