districts

img

மாணவர்கள் வாகனங்களை இயக்கக்கூடாது

தருமபுரி, பிப்.7- 18 வயதிற்கு குறைவானவர்கள் வாக னங்களை இயக்கக்கூடாது என மோட்டார் வாகன ஆய்வாளர் அறிவுறுத்தியுள்ளார். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து சாலை பாது காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற் றது. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவர் பாலசுப்பிர மணியம் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சி யில் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடு சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பேசுகையில், சாலை விதிமுறைகளை எவ் வாறு பின்பற்றுவது மற்றும் சாலையில் மாணவ, மாணவிகள் நடக்கும்போது வலது புறம் நடக்கவும், சாலையை கடக்கும் போது  சாலையின் இருபுறமும் கவனித்து பின் செல் லுதல், பேருந்துகளில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் நின்றபடி செல்லாமல் பாதுகாப்புடன் பயணிப்பது, 18 வயதுக்கு குறைவான மாணவ, மாணவிகள் இரு சக்கர வாகனத்தை இயக்கக்கூடாது. இருசக் கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல  வேண்டும் என்றார். மேலும், செல்போனில் பேசியப்படி வாகனத்தை இயக்குவது தற் போது சகஜமாக நடந்து வருகிறது.  விபரீதம் நடந்தால் பாதிப்பு யாருக்கு என்பதையும் மாணவர்கள் உணர வேண்டும், என்றார். அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவி களின் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்பு ணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தொடங்கி பேருந்து நிலையம் வரை சென்று மீண் டும் மருத்துவமனையில் நிறைவடைந்தது. இதில், மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப் புணர்வு பதாகைகளை ஏந்தி, முழக்கமிட்ட வாறு சென்றனர். இந்நிகழ்ச்சியில் மருந்தாளு நர் முத்துசாமி, காவல் துறையினர், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.