districts

மாணவிகள் சமூக அக்கறையுள்ள தொழில் முனைவோராக மாற வேண்டும்

திருப்பூர், செப். 3 - மாணவிகள் சமூக அக்கறையுள்ள தொழில் முனைவோராக மாற வேண்டும் என்று எத்தியோப்பியா பல்கலைக்கழக கூட் டுறவுத்துறை பேராசிரியர் டாக்டர் கருணா கரன் கேட்டுக்கொண்டார். திருப்பூர் அருகே வஞ்சிபாளையம் தீரன்  சின்னமலை மகளிர் கலை, அறிவியல் கல்லூ ரியில் வணிகவியல் மற்றும் மேலாண்மை துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் செவ் வாயன்று நடைபெற்றது. இந்த கருத்தரங் கிற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் ரேச்சல் நான்சி பிலிப் தலைமை ஏற்றார். ‘சமூகத் தொழில் முனைவோர் முயற்சியின் செயல் திறன்’ என்ற தலைப்பில் எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த ஹவாசா பல்கலைக்கழக கூட்டுறவு துறை பேராசிரியர் டாக்டர் கரு ணாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.  அப்போது அவர் பேசுகையில், இன்றைய  சூழலில் தொழில்கள் அனைத்தும் லாபத்தை யும், பங்குதாரர்களையும் மட்டுமே மைய மாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கி றது. இந்த அணுகுமுறையின் காரணமாக  இடைத்தரகர்கள் மட்டுமே பயன் பெறுகி றார்கள். இந்த நிலை மாற வேண்டும். தொழில்  முனைவோர் தங்களுக்கான சமூக அக்கறை யுடன் செயல்பட வேண்டும். ஒவ்வொரு தொழிலும் சமூக பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். வறுமையின்மை, பசி ஒழிப்பு, அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்வு, அனைவருக்கும் தரமான கல்வி,  மலிவான மற்றும் சுத்தமான ஆற்றல் போன்ற  இலக்குகளை அடைய தொழில் முனைவோர்  ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். சமூகத் தொழில் முனைவோர் பட்டியலில் இந்தியா 14ஆவது இடத்தில் உள்ளது. குறிப்பாக இதில் பெண்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.  மாணவிகளும் தங்க ளுடைய படைப்பாற்றல்களையும், புதுமை  எண்ணங்களையும் கொண்டு ஒவ்வொருவ ரும் சமூக அக்கறையுள்ள தொழில் முனை வோர்களாக மாற வேண்டும், என்று கூறி னார். இந்த நிகழ்ச்சியில் வணிகவியல் துறை,  வணிகம் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை, வணிகம் மற்றும் தொழில் பகுப் பாய்வுத் துறை, வணிக மேலாண்மை துறை  மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். கருத்தரங்கில், கல்லூரி பேராசிரியர்கள் காயத்ரி, கற்பகவல்லி, பூரணிமா, சந்திரகலா,  கவிதா மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் ஏற்பா டுகளை செய்திருந்தனர். முடிவில் வணிக வியல் துறைத் தலைவர் காயத்ரி நன்றி கூறி னார்.