கோவை, ஜன.30- கோவை இராமநாதபுரம் அரசு பள்ளி யில் சூயஸ் நிறுவனம் குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து அப்பள்ளி மாணவர்கள் மரத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் சூயஸ் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளை யாட்டு மைதானத்தில் குடிநீர் தொட்டி அமைப் பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு, தொட்டி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல் வேறு அமைப்புகள், கட்சிகள் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிறன்று மாண வர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி மைதா னத்தில் நடந்து வரும் சூயஸ் தொட்டி பணி களை நிறுத்த வேண்டும் என கோரியும், மாந கராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையே மாணவர்கள் சிலர் பள்ளியில் உள்ள மரத்தின் மீது ஏறிய தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப் பாட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது.