திருப்பூர், ஏப்.3- 18ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவை முன்னிட்டு ஞாயிறன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலை இலக் கிய திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்பட் டன. இதில் அலை, அலையாக பல்லாயிரக் கணக்கில் மாணவ, மாணவிகள் ஆர்வத் துடன் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர். திருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து 18ஆவது புத் தகத் திருவிழாவை ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 11 நாட்கள் நடத்து கின்றனர். ஆண்டுதோறும் புத்தகத் திரு விழாவை முன்னிட்டு மாணவ, மாணவி களுக்கு கலை இலக்கியத் திறனாய்வுப் போட்டிகள் நடத்தப்படும். இதில் திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் பல்லாயிரக் கணக்கில் மாணவ, மாணவிகள் பங்கேற் பார்கள். எனினும் கடந்த இரண்டு ஆண்டு களாக கொரோனா பெருந்தொற்று காரண மாக புத்தகத் திருவிழா நடத்தப்படவில்லை. எனவே, மாணவர்களுக்கான கலை இலக்கிய திறனாய்வுப் போட்டிகளும் நடைபெறவில்லை.
இந்நிலையில், 2022ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா அறிவிக்கப்பட்ட நிலை யில், ஞாயிறன்று திறனாய்வு போட்டிகள் ஐந்து மையங்களில் நடத்தப்பட்டன. திருப் பூர் பல்லடம் சாலை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் எதிரில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம், இடுவாய் ஊராட்சி சின்னக்காளிபாளையத்தில் உள்ள சின்னம்மன் திருமண மண்டபம், திருப்பூர் குமார் நகரில் உள்ள கருப்பராயசாமி கல் யாண மண்டபம், பெருமாநல்லூர் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஸ்ரீ செல்வம் மஹால், நல்லூர் பழைய சார் பதிவாளர் அலுவலகம் எதிரில் சோளியம்மன் திருமண மண்டபம் ஆகிய ஐந்து மையங்களில் திற னாய்வுப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஓவியம், கட்டுரை, கவிதை ஆகிய வகை களில் 1 முதல் 5 வகுப்புகள் வரை, 6 முதல் 8ஆம் வகுப்பு வரை மற்றும் 9 முதல் 12 மணி வரை என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடத்தப்பட்டன.
எனினும் அனைத்து மையங்களிலும் காலை 9 மணி முதலே பெற்றோர்கள், மாணவ, மாணவி கள் போட்டி நடைபெறும் மண்டபங் களுக்கு ஆர்வமுடன் படையெடுத்தனர். திருப்பூர் புத்தகத் திருவிழா வரவேற்புக் குழுத் தலைவர் பி.மோகன், செயலாளர் ஆர்.ஈஸ்வரன், பொருளாளர் எஸ்.சுப்பிர மணியன், இடுவாய் ஊராட்சிமன்றத் தலை வர் கே.கணேசன் உள்பட வரவேற்புக்குழு நிர்வாகிகள் இந்த மையங்களில் போட்டி களைத் தொடக்கி வைத்தனர். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் யுனி வர்சல் பள்ளி ஆசிரியர்கள், பிஎஸ்என் எல் ஊழியர் சங்கத்தினர், அறிவியல் இயக்கத்தினர் உள்பட புத்தகத் திருவிழா வரவேற்புக்குழு உறுப்பினர்கள் தன்னார் வலர்களாக செயல்பட்டு இப்போட்டிக் கான ஏற்பாடுகளை செய்தனர். இதில், ஏறத் தாழ 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆர்வ முடன் ஓவியங்கள் வரைந்தும், கவிதை, கட்டுரைகள் எழுதியும் ஏற்பாட்டாளர் களிடம் ஒப்படைத்தனர். முன்னதாக. இந்த போட்டியை நடத்த உதவி செய்த 5 திரு மண மண்டப உரிமையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களாக பங்கேற்ற ஆசிரியர் கள், பெற்றோர்கள், மாணவர்களுக்கும் வரவேற்புக் குழுவினர் நன்றி தெரிவித்த னர்.
இப்போட்டிகளில் பங்கேற்றோரில் வெற்றி பெற்றோர் தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகத் திருவிழா கண்காட்சியில் 19ஆம் தேதி பரிசளிப்பு விழா நடைபெறும். அத்துடன் பங்கேற்ற அனைவருக்கும் சான் றிதழ்களும் வழங்கப்படும். புத்தகத் திரு விழாவுக்கு வருகை தரும் மாணவ, மாண வியருக்கு ஒவ்வொரு நாளும் குலுக்கல் முறையில் 10 பேருக்கு தலா ரூ.500 மதிப் புள்ள புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது என்றும் வரவேற்புக்குழுத் தலைவர் பி. மோகன் தெரிவித்தார்.