districts

img

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

உடுமலை, ஏப்.6- உடுமலை, பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நி லைப் பள்ளி மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செய்தனர். சாலை பாதுகாப்பு விதிகளை  பற்றிய விழிப்புணர்வு  ஏற்ப டுத்தும் வகையில், பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு  பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை வை. விஜயலட்சுமி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இவர், மாநில நல்லாசிரிய  விருது பெற்ற ஆசிரியை.  பள்ளி  மாணவிகள், பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து செல்வ தன் அவசியத்தை குறித்தும், சீட் பெல்ட் அணிந்து செல்வ தையும், செல்போன் பேசிக் கொண்டு வாகனங்கள் ஓட்டு வதை தவிர்க்கவும், இருசக்கர வாகனத்தில் மூன்றுபேர் அமர்ந்து செல்வதை தவிர்க்கவும் வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு பலகையுடன்  பள்ளியின் முன்புறம் அமைந்துள்ள சாலைகளில் செல்லும் பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர்.