திருப்பூர், ஜூன் 14 – உடுமலை வட்டம், தேவனூர் புதூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில், அந்த பிரிவில் சேர்ந்து படிக் கப் பெயர்ப் பதிவு செய்த மாணவர் களை வேறு பிரிவுகளுக்கு மாற்றிக் கொள்ளும்படி நிர்பந்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம், தேவனூர் புதூர் பகுதி யில் நாச்சிமுத்து கவுண்டர் பழனி யம்மாள் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் 11ஆம் வகுப்பில் முதல் குரூப் பாடப்பிரிவுகள் (இயற்பியல், வேதியல், கணிதம், உயிரி யல்) தமிழ் வழியிலும், (இயற்பியல், வேதியல், கணிணிஅறிவியல், கணித வியல்) ஆங்கில வழியிலும் துவக்கப் பட்டுள்ளதாக தெரிய வருகிறது. மாணவர்கள் பலரும் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் முதல் குரூப் பாடப்பிரிவு ஆசிரியர்களை இன்னும் ஏற்பாடு செய்து முடிக்காத நிலையில், இப்பிரி வில் சேர்ந்த மாணவர்களை வேறு பிரி வுக்கு மாற்றிக் கொள்ளும்படி நிர்பந்தம் செய்வதாகக் கூறப்படுகிறது. உடுமலையின் மேற்கு பகுதி சுற்று வட்டாரத்தில் வேறு பள்ளிகள் இல்லாத நிலையில் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்கவும், ஏழை மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பாடப்பிரிவுகளை துவக்கி நடத்திட உடனடியாக உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோ ருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட் டுள்ளது.