districts

img

மும்மொழி கொள்கைக்கு எதிராக மாணவர்கள் முழக்கம்

சேலம், பிப்.25- ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக  அனைத்து மாணவர் கூட்டமைப்பின் சார்பில் செவ்வாயன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு நாடு முழுவதும்  மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முயற்சித்து வரு கிறது. இதன்மூலம், இந்தி மொழியை கட்டாயப்படுத்த நினைக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழு வதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. அதன்ஒருபகுதியாக, சேலம் கோட்டை  ஹமைதானத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு தமிழ்நாடு  மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு திமுக மாணவரணி நிர்வாகி தமிழரசன் தலைமை வகித் தார். இதில் இந்திய மாணவர் சங்க மாவட்ட துணைத்தலை வர் கோகுல்ராஜ், துணைச்செயலாளர் டார்வின் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், மதிமுக மாணவர்  அமைப்பின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்ட னர். நாமக்கல் நாமக்கல் தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பால சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில் துணை அமைப் பாளர்கள் ஐயப்பன் (எ) பெருமாள், தங்கமணி, ஸ்ரீமதன்,  லாவண்யா மற்றும்  மாணவர் கூட்டமைப்பைச்  சேர்ந்த பலர் கலந்து கொண்டு, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங் களை எழுப்பினர். ஈரோடு ஈரோடு மாவட்டம், ஜவான் பவன் அருகில் மாணவர்  கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு திமுக மாநகர மாணவரணி அமைப்பாளர் என்.ஸ்ரீதர்  தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலை வர் த.நவீன் மற்றும் பல்வேறு மாணவரமைப்பின் நிர்வாகி கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாநக ராட்சி மேயர் சு.நாகரத்தினம், திமுக மாநகர செயலாளர் மு. சுப்பிரமணியம் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். கோவை கோவை சாய்பாபா காலனி பகுதியில் நடைபெற்ற கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திமுக மாவட் டச் செயலாளர்கள் ந. கார்த்திக், தளபதி முருகேசன், தொண் டாமுத்தூர் ரவி, திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி,  இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் அகமது ஜூல்ஃபி கர், மாவட்ட துணைச் செயலாளர் சுதின் பாரதி உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.