districts

அனைத்து அரசு பள்ளிகளிலும் தூய்மை பணியாளர்களை நியமிக்க முதல்வர் தனிப்பிரிவிற்கு மாணவர் சங்கம் மனு

திருப்பூர், ஏப்.30- பள்ளி மாணவிகளை கழிவ றையை சுத்தம் செய்ய வைத்த ஆசி ரியர்களின் மீது நடவடிக்கை எடுத் தது போல, விடுமுறை முடிந்து பள் ளிகள் திறப்பதற்கு முன்பு அனைத்து அரசு பள்ளிகளிலும் தூய்மைப் பணியாளர்கள் நியமிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என  இந்திய மாணவர் சங்கத்தினர், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.  இதுகுறித்து, இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் கல்கி, மாவட்டச் செய லாளர் பிரவீன் ஆகியோர் செவ்வா யன்று முதலமைச்சர் தனிப்பி ரிவு, பள்ளிக்கல்வித்துறை மற்றும்  மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோ ருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:- தாராபுரம் தாலூகா, குளத்துப் பாளையம் பேரூராட்சி, குமாரபா ளையம் அரசு நடுநிலைபள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வரும் கருங் காலிவலசு பகுதியைச் சார்ந்த 2  மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கட்டாயப் படுத்தி பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளதாக பத்திரிக்கை செய்தி மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் வந்தது. அதன் அடிப்படையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில்  பாதிக்கப்பட்ட அந்த மாணவிகள் இருவரையும் நேரில் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து விசாரித் தோம்.  மேற்படி, பள்ளியில் கடந்த 3  மாத காலமாக தூய்மைப்பணி யாளர் பணிக்கு வராத காரணத்தால்  பள்ளியில் பயிலும் மாணவிகளை 2 மாதமாக பள்ளி கழிவறையை சுத்தம்  செய்ய வேண்டும் என கட்டாயப்ப டுத்தி தினம்தோறும் அந்த மாண விகள் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளனர். இந்த செய்தி சமூக  வலைதளங்களிலும், பத்திரிகைக ளிலும் வெளியானதை தொடர்ந்து  மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறை அதிகாரிகளும் இந்த சம்ப வம் குறித்து விசாரித்து அந்த  பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர் இருவரை யும் பணியிடை நீக்கம் செய்து உத்த ரவிட்டுள்ளனர்.  3 மாத காலமாக பள்ளியில் தூய்மை பணியாளர் பணிக்கு வரா மல் இருந்ததை கண்டும் காணா மல் இருந்த உள்ளாட்சி நிர்வா கம் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும். அதேபோல 3 மாத மாக தூய்மைப் பணிக்கு பணியா ளர் வராமல் இருப்பதை கல்வித் துறை அதிகாரிகளுக்கு பள்ளி நிர் வாகம் தெரிவித்திருக்க வேண்டும்.  மேற்படி நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம் இந்த சம்பவத்தை பயன்படுத்தி சில அமைப்புகள் அந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் அவரது உறவினர்களிடம் பேரம் பேச முயற்சிப்பதாக தெரி கிறது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.  இப்படியான நடவடிக்கையில் ஈடுபடும் அமைப்புகளின் தலைவர் கள் மீது நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். கோடை விடு முறை முடிந்து பள்ளிகள் திறப்ப தற்கு முன்பு, தமிழக அரசும் மாவட்ட  நிர்வாகமும் அனைத்து பள்ளிகளி லும் தூய்மைப் பணியாளர்களை நிய மிக்க வேண்டும். தினம் தோறும் கழி வறை உள்ளிட்ட பணிகள் முறை யாக நடைபெறுகிறதா என்பதை  கண்காணித்தால் தான் இப்படி யான சம்பவங்கள் நடைபெறு வதை வரும் காலங்களில் தவிர்க்க  முடியும். எனவே, தமிழக அரசாங் கம் இனி வரும் காலங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள நவீன  கருவிகளை பயன்படுத்தப்படுவ தையும் குறைந்தபட்சம் பள்ளிக்கு ஒரு தூய்மைப் பணியாளரை நிய மித்து அதனை சரிவர கண்கா ணித்து மாணவர்கள் நலனையும், பள்ளி ஆசிரியர்கள் நலனையும் காக்க வேண்டும் என அதில் கூறப் பட்டுள்ளது.