திருப்பூர், ஜன.23- திருப்பூர் புத்தகத் திருவிழா நடைபெறுவதை முன் னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிக ளிலும் செவ்வாய்க்கிழமை மாணவர்கள் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். இதில் புத்தகத் திருவிழாவில் மாணவர்களை பங்கேற்க ஊக்கப்படுத்தும் வகையில், புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் 11 மணி வரை அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் அனைத்து வகுப்பு மாணாக்கர்களும் வாசிப்புத் திறன் செயல்பாட் டில் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாசிப்பு திறன் நிகழ்ச்சியை நடத்துவதை உறு திப்படுத்த மாவட்டக் கல்வி அலுவலர்கள், இடைநிலை, தனியார் பள்ளிகள், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிக ளில் நடைபெறும் வாசிப்புத் திறன் செயல்பாட்டினை பார் வையிடவும் கேட்டுக் கொள்ளப்பபட்டு உள்ளது. கடந்த காலங்களில் திருப்பூர் புத்தகத் திருவிழா நடை பெறும் சமயம் “திருப்பூர் வாசிக்கிறது” என்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல் இந்த ஆண்டு புத்தகத் திருவிழா வரும் 27ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கு மூன்று தினங்களுக்கு முன்பாக அனைத்துப் பள் ளிகளிலும் அனைத்து மாணவர்களும் புத்தக வாசிப்பில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மாணாக்கர் கள் புத்தக வாசிப்பில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக் கது.