districts

திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ஜன. 8 ல்- மாணவர் திறனாய்வு போட்டிகள்

திருப்பூர், ஜன.3 - தமிழ்நாடு அரசு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல்  புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 19ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழாவை முன்னிட்டு வரும் ஜனவரி  8ஆம் தேதி மாணவர் திறனாய்வு போட்டிகள் நடத்தப்படுகின்றன. திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இப்போட்டிகள் நடத் தப்படுகின்றன. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் திருப்பூர் புத்தகத் திருவிழாவில் மாணவ -  மாணவிகள் பங்கேற்பை ஊக்கு விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் திறனாய்வு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் கலை, இலக்கியப் போட்டி களில் வெற்றி பெறும் முதல் மூன்று  பேருக்கு தலா ரூ.500, ரூ.300, ரூ.200  வீதம் பரிசளிக்கப்படுவதுடன் பாராட்டு சான்றிதழும், நினைவுப் பரிசும் வழங்கப்படுகிறது. அத் துடன் போட்டியில் பங்கேற்கும்  அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி 19ஆவது புத்தகத் திருவிழா ஜனவரி 27 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி வரை  10 நாட்கள் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெறு கிறது.  இந்தப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 8ஆம் தேதி ஞாயிறன்று மாணவ - மாணவியர் களுக்கு கலை இலக்கிய திற னாய்வுப் போட்டிகள் நடத்தப்படு கின்றன.  இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர் களுக்கு ஓவியப் போட்டி நடத்தப் படுகிறது. இரவு வானம், இயற்கை காட்சி, தமிழர் திருநாள், நான் ரசித்த கார்ட்டூன் ஆகிய நான்கு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் ஓவியம் வரையலாம்.

ஆறு முதல் எட்டாம் வகுப்பு  வரை உள்ள மாணவ-மாணவி களுக்கு ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. அவர் கள் ஓவியப் போட்டியில் பூமிப் பந்தை காப்போம், எனது கனவு,  விபத்தில்லா சாலை, ஜல்லிக்கட்டு ஆகிய நான்கு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் ஓவியம் வரை யலாம். அதேபோல் கட்டுரை போட்டியில் சாதிக்க வேண்டிய சாதனைகள், வேண்டாம் யுத்தம், உழவே தலை, உடற்பயிற்சியும் உடல் நலமும் என்ற நான்கு தலைப்புகளில் ஒன்றில் கட்டுரை எழுதலாம். மேலும், ஒன்பது முதல் 12 ஆம்  வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை  மற்றும் கவிதை போட்டிகள் நடத் தப்படுகின்றன. இயற்கையும் வாழ்வும், ஒப்பற்ற தலைவர்கள், கனவும் கணினியும், கொரோ னாவிற்குப் பின் ஆகிய நான்கு தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் ஓவியம் வரையலாம்.

கட்டுரைப் போட்டியில் நான்  காண துடிக்கும் தேசம், புரட்டிப் போட்ட புத்தகம், என்று தணியும்  பூமி, போதை அல்ல பாதை ஆகிய  தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் கட்டுரை எழுதலாம். கவிதை போட்டியில், பாரடா உன் மானுடப் பரப்பை, வியர்வைத் துளிகள், மாதரைப் போற்றுவோம், பெரும் பொருளே பேரழகே! ஆகிய நான்கில் ஒரு தலைப்பில் கவிதை புனையலாம். இப்போட்டிகள் திருப்பூரில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண் கள் மேல்நிலைப்பள்ளி, கேஎஸ்சி அரசு மேல்நிலைப்பள்ளி, குமார்  நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பெரிச்சிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி, நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இடுவம்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி, என் ஆர் கே புரம்  மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளி, 15 வேலம் பாளையம் மாநகராட்சி நடு நிலைப்பள்ளி, பெருமாநல்லூர்

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காங்கேயம் நகராட்சி நடு நிலைப்பள்ளி, வெள்ளகோவில்  அரசு நடுநிலைப்பள்ளி, அவிநாசி  அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஊத்துக்குளி அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொங்கலூர் பி வி கே என் மேல் நிலைப்பள்ளி, தாராபுரம் என்சிபி மேல்நிலைப்பள்ளி, மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி, உடு மலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, குடிமங்கலம் அரசு மேல் நிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு  மேல்நிலைப்பள்ளி என திருப்பூர்  மாவட்டத்தில் 22 பள்ளிகளில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஓவியப் போட்டிகள் ஞாயிறு காலை 10 மணி முதல் 11 மணி வரையும், கட்டுரைப் போட்டிகள் பகல் 11 மணி முதல் 12 மணி வரை யும், கவிதைப்போட்டி நண்பகல் 12 மணி முதல் மதியம் 1 மணி வரையும் நடைபெறும். போட்டிக்குத் தேவையான தாள்கள், ஓவியம் வரைவதற்கான வரைபட தாள்கள் வழங்கப்படும். கட்டுரைப் போட்டி நான்கு பக்கங் களுக்கு மிகாமலும், கவிதை போட்டி இரண்டு பக்கங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்போர் தங்கள்  பெயர் படிக்கும் வகுப்பு, பள்ளி  மற்றும் வசிப்பிட முகவரி, தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் ஆகிய விபரங்களை குறிப் பிட வேண்டும். ஏதேனும் ஒரு மையத்தில் மட்டுமே போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று போட்டி ஏற்பட்டாளர்கள் தெரிவித் துள்ளனர்.