கோபி, ஜன.6- கோபிசெட்டிபாளையம் அருகே வெள் ளாளபாளையம் பிரிவில் இருசக்கர வாக னம் மீது கல்லூரி பேருந்து மோதிய விபத் தில் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியல் கல்லூரி செயல் பட்டு வருகிறது. இக்கல்லூரியில் கோபி ஈஸ்வரன் கோவில் வீதியைச் சேர்ந்த சுப்பிர மணியம் என்பவரின் மகள் சுவர்ணா ஸ்ரீ, இரண் டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலை யில் கல்லூரி மாணவி சுவர்ணா வெள்ளி யன்று காலை வழக்கம் போல், தனது எலக்ட் ரிக் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கோபி யிலிருந்து மாணவர்களை ஏற்றி கொண்டு, மாணவி பயிலும் அதே கல்லூரி பேருந்து கல் லூரியை நோக்கி சென்றதாக தெரிகிறது. அப்போது, பேருந்தானது வெள்ளாளபாளை யம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, மற்றொரு வாகனத்தை முந்தும் முயற் சியில் கல்லூரி மாணவியின் மீது மோதியுள் ளது. இதில், கிழே விழுந்த மாணவி, தலை யில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார் இதுகுறித்து தகவலறிந்து வந்த கோபி செட்டிபாளையம் போலீசார், சாலை விபத் தில் உயிரிழந்த கல்லூரி மாணவியின் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.