districts

img

பெரியார் பல்கலைக்கழக நிர்வாக சீர்கேடுகள் பேராசிரியர்கள், மாணவர் கூட்டமைப்பு போராட்டம்

சேலம் ஜூலை 27- சேலம் பெரியார் பல்கலைக்கழக முறை கேடுகளை கண்டித்து இரண்டு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கம்  இனைந்து கூட்டுக்குழு சார்பில் பெரியார் பல் கலைக்கழக நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த் தைக்கு அழைத்த துணைவேந்தர் திடீரென பல்கலைகழகத்தை விட்டு வெளியேறிய சம் பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சேலம் பெரியார் பல் கலைக்கழகம் தொடர்ச்சியாக மாணவர் விரோ தப் போக்கு நிர்வாக சீர்கேடுகள் தொடர்ச் சியாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகு தியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல் கலைக்கழக தேர்வில் சாதிய ரீதியான வினாவை மாணவர்களிடையே வழங்கி பெரிய சர்ச்சை யில் சிக்கியது. இந்த வாரம் பல்கலைக்கழ கத்தின் பதிவாளர் பொறுப்பில் உள்ள வேதி யியல் பேராசிரியர் கோபி மாணவியிடம் பாலி யல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு நிர்வாகத் தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இதனால், உயர்கல் வித்துறைக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற் பட்டுள்ளது. மேலும், இதனை நம்பி உள்ள நான்கு மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாண விகள் பெரிய அளவில் பாதிப்பில் உள்ள னர்.

குறிப்பாக, பல்கலைக்கழக தேர்வு குறித்த அச்சம் மாணவர்களிடையே பெரிய மன குழப் பத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பல்க லைக்கழகத்திற்கு உட்பட்ட அரசு கலைக்கல் லூரி ஆசிரியர் சங்கங்கள் தற்போது மாண வர்களுக்கு ஆதரவாக பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை களைய வலியுறுத்தி ஆசிரியர், மாணவர் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற் படுத்தி பெரியார் பல்கலைக்கழகத்தில் முறை யீடு செய்ய இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்த துணைவேந்தர், நிர்வாகிகள் சென்று பார்த்த போது, அவர் பின்வழியாக சென்றது தெரிய வந்தது. 

துணைவேந்தர் பின் வழியே ஓட்டம்? 

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் கூறுகையில், ஆசிரியர் மாணவர் கூட்டுக் குழு போராட் டத்தை தொடர்ந்து 100க்கு மேற்பட்ட கோரிக் கைகளை விவாதிப்பதற்காக பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகநாதன் அவர்களி டம் அனுமதி கேட்கப்பட்டது. அவரும், ஆசிரி யர் மற்றும் மாணவர் கூட்டமைப்பு நிர்வாகி களை வரச் சொல்லிவிட்டு பின் வழியே சென்று விட்டார். நாங்கள் துணைவேந்தரை சந்தித்து விட்டு தான் செல்வோம் என ஆசிரி யர் மாணவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் துணைவேந்தர் அறையில் அமர்ந்துள்ளோம்,  என்றார். மேலும், பேச்சுவார்த்தைக்கு அழைத்து விட்டு துணைவேந்தர் பின்வாசல் வழியாக சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சேலம் மாநகர காவல்  துணை ஆணையர் மாடசாமி தலைமையில்  காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இப்போராட்டத்தில், இந்திய  மாணவர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலை வர் தேன்மொழி, மாநில செயற்குழு உறுப்பி னர் சரவணன், மாவட்ட தலைவர் எஸ்.பவித் ரன் மற்றும் அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் மற்றும் அரசு கல்லூரி ஆசிரியர் மன்ற நிர் வாகிகள் பங்கேற்றனர்.