பி.ஆர்.நடராஜன் பேச்சு கோவை, அக்.2- கடந்த காலத்தில் போராடி பெற்ற உரிமைகளை பாதுகாக்க தற்போது போராட்டம் நடத்த வேண்டியுள்ளது என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஓய்வூதியர் தின சிறப்புக் கூட்டம் மத்திய, மாநில அரசு பொதுத் துறை ஓய்வூதியர்கள் சங்கங்களின் சார்பில் கோவை ரயில் நிலையம் அரு கில் உள்ள தாமஸ் கிளப் அரங்கத்தில் திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்டத் தலைவர் என்.சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் பி.சந்திரன் வரவேற்றார். மாவட் டச் செயலாளர் என்.அரங்கநாதன் துவக்க உரையாற்றினார். சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.கருணாநிதி சிறப்புரையாற்றினார். இதைத்தொ டர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசுகையில், கடந்த காலங்களில் பெறப்பட்ட அத்தனை சலு கைகளும், போராட்டத்தின் மூலமாக மட்டுமே கிடைத்துள்ளன. தற்போது போராடிப்பெற்ற சலுகைகளை பாது காக்க போராட்டம் நடத்த வேண்டியுள் ளது. வரும் காலத்தில் போராட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறும் நலன்களை கடந்து, 130 கோடி மக்களின் ஒற்று மையை பாதுகாக்க, ஒற்றுமையை வலி யுறுத்துகிற, உழைக்கும் வர்க்கத்தின் நலன் காக்கும் ஒரு அமைப்பு முறையை பாதுகாக்க நாம் செயலாற்ற வேண்டி யுள்ளது. 2024 ஆம் ஆண்டு தேசத்தின் நலன் கருதி பொறுப்போடு செயலாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்ப தாக பி.ஆர்.நடராஜன் எம்.பி., தெரிவித் தார். இந்நிகழ்ச்சியில் அனைத்து ஓய்வூ தியர் சங்க, மின்வாரிய ஓய்வூதியர் நல அமைப்பு, ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் நல அமைப்பு, அகில இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங் கத்தினர், பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கத்தினர், ஓய்வுபெற்ற பள்ளி கல் லூரி ஆசிரியர் நல சங்கத்தினர், வரு மான வரி ஓய்வூதியர் நல சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் குடி யரசு நன்றி கூறினார்.