அவிநாசி, ஏப்.1- அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தரமான குடிநீர் வழங்கக் கோரி, பொது மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்று கையிட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி பேரூ ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு விநியோ கிக்கும் குடிநீர் தரமானதாக இல்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. பல ஆண்டுகளாக வழங்கி வந்த 2ஆவது கூட்டு குடிநீர் திட்டக் குடிநீரை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், தரமான குடிநீர் கேட்டு, அவிநாசி பேரூராட்சி 13ஆவது வார்டுக்கு உள்பட்ட காந்திபுரம், வாணியர் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அவி நாசி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் னர், பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்து சென்றனர்.