தருமபுரி, ஏப்.25- நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக் கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டத்தில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். நூறுநாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி, தினக்கூலியாக ரூ.300 வழங்க வேண்டும். அனைத்து பேரூ ராட்சிகளிலும் நூறுநாள் வேலைத்திட் டத்தை அமல்படுத்த வேண்டும். வேலை செய்யும் இடங்களில் நிழற்கூடம், மருத் துவ வசதி, குடிநீர் கிடைப்பதை உறுதி படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.ரவி தலைமை வகித் தார். மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாவட்ட செயலாளர் எம்.முத்து, மாவட்ட நிர்வாகிகள் இ.கே.முருகன், கே.கோவிந்தசாமி, கே.எல்லப்பன், ரஜினிமுருகன், சி.ராஜா, ஜி.பாண்டியம்மாள் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றினர். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வே.விசுவநாதன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். நிறை வாக, மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி யிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப் பட்டது.