districts

img

பட்டா கேட்டு கோவணம் கட்டி, திருவோடு ஏந்தி போராட்டம்

கோவை, பிப்.12- கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித் தும், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி களை கண்டித்தும் கோவணம் கட்டி கொண்டு, கையில் திருவோடு ஏந்தி விடு தலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத் தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆதிதிராவிடர் துறை சார்பில் ஆதிதிராவிடர் மக்களுக்கான வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுக் கப்பட்டு, விசாரணை முடிந்த பிறகும் பட்டா  வழங்காமல் இருப்பதாக கூறி மாவட்ட ஆட் சியர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதி காரிகளை கண்டித்து, விடுதலை சிறுத்தை கள் கட்சியின் கோவை மண்டலச் செயலா ளர் சுசி.கலையரசன் கோவணம் கட்டி கொண் டும், திருவோடு ஏந்தியும் போராட்டத்தில் ஈடுப்பட்டார். இவருடன் சுமார் 10க்கும் மேற் பட்ட விசிகவினர் கலந்து கொண்டு, மாவட்ட  நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங் களை எழுப்பினர். மேலும், கோவையில் அம்பேத்கர் சிலை  நிறுவ வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டெ டுத்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத் தியும் முழக்கங்கள் எழுப்பினர்.  இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட் டியளித்த கலையரசன்,  வீட்டுமனை பட்டா  வழங்க மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை யினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் லஞ்சம்  கேட்பதாகவும், இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம்  சாட்டி னார். இதன் காரணமாகவே கோவனம் கட்டி  கொண்டு, திருவோடு ஏந்தி மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கேட்டுக்கொண்டார். இதையடுத்து அனுமதி யின்றி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.