districts

img

நூல் விலை உயர்வுக்கு எதிராக இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்

ஈரோடு, மே 17- நூல் விலை உயர்விற்கு எதி ராக ஜவுளி உற்பத்தியாளர் அழைப்பு விடுத்துள்ள கடைய டைப்பு போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது. பஞ்சு மற்றும் நூல் விலை உயர் வின் காரணமாக ஜவுளித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள் ளது. கடந்த 18 மாதங்களில் நூறு விழுக்காடு நூல் விலை உயர்ந்துள் ளது. இதனால், பாதிக்கப்பட்ட ஜவுளி தொழிலை பாதுகாக்க, பருத் தியை அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும். நூல் விலை  உயர்வைக் கட்டுப்படுத்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கட்கிழமை தொடங் கிய கடையடைப்பு போராட்டம், செவ்வாய்க்கிழமையும் நடை பெற்றது. இந்திரா நகர், தெப்பக் குளம் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, பன்னீர் செல்வம் பார்க் பகுதி, சென்ட்ரல் தியேட்டர் பகுதி, என்எம்எஸ் காம்பவுண்ட், சூரம் பட்டி மற்றும் மாணிக்கம்பாளை யம் போன்ற பகுதிகளில் ஜவுளி நிறுவனங்கள் அடைக்கப்பட்டி ருந்தன. இதனால், விசைத்தறி தொழிலா ளர்கள், மடிகாரர்கள், பேல் போடு பவர், சுமை தூக்குவோர், லாரிக ளுக்கு பாரம் ஏற்றுவோர், மாண்டி வண்டி மற்றும் சரக்கு லாரிகளில் வேலை செய்வோர் என சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தி யாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் 

நூல் விலை உயர்வை கண் டித்து நாமக்கல் மாவட்டம், குமா ரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையின் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்திற்கு நகர குழு உறுப்பி னர் எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்த சாமி, நகர செயலாளர் என். சக்தி வேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் நகர குழு உறுப்பினர்கள் காளியப்பன், சண்முகம், மாதேஷ் சரவணன், மூத்த தோழர் ஆறுமுகம் மற்றும் கட்சி கிளை செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.