districts

img

சாலையோரம் வாகனத்தை நிறுத்தி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: சேலம் ஆட்சியர் உத்தரவு

சேலம், செப்.6- சங்ககிரி அருகே ஏற்பட்ட சாலை விபத்தினை ஆய்வுசெய்த மாவட்ட  ஆட்சியர் செ.கார்மேகம், விபத்தை  ஏற்படுத்தும் வகையில் சாலையோ ரம் வாகனத்தை நிறுத்தி வைப்ப வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என உத்தரவிட்டார். சேலம் மாவட்டம், சங்ககிரி வட் டம், சின்னாகவுண்டனூர் தேசிய நெஞ் சாலையில் புதனன்று அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது  ஆம்னி வேன் மோதி விபத்துக்குள் ளானது. இதில் வேனில் பயணம் செய்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த னர். மேலும், 2 பேர் படுகாயங்களு டன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விபத்து ஏற்பட்ட இடத் தில் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். மேலும், விபத்தில் உயிரி ழந்தவர்களின் உறவினர்களை சந் தித்து ஆறுதல் தெரிவித்தார். இதன் பின் அவர் பேசுகையில், வாகன ஓட்டி கள் சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டுமென தொடர்ந்து  அறிவுறுத்தப்பட்டு வருகிறது.  விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி  வைப்பவர்கள் மீது கடும் நடவ டிக்கை மேற்கொள்ள உத்தரவிடப் பட்டுள்ளது. அந்த வகையில் மேற் கண்ட வாகன விபத்தை ஏற்படுத்த காரணமாக சாலையில் வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த வாகன ஓட்டு நரை காவல்துறையால் கைது செய் யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித் தார். குடும்பத்தினருக்கு இழப்பீடு: வாலிபர் சங்கம் சங்ககிரி அருகே சாலை விபத் தில் பலியானவர்களின் குடும்பத்தின ருக்கு இழப்பீடு வழங்க இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து வாலிபர் சங்கத் தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக் கையில், இந்த சாலை விபத்தில் ஒரு பெண் குழந்தை உள்பட 6 பேர் உயிரி ழந்தனர். இவர்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த ஈங்கூர், குட்டபாளையம் பகுதியைத் சேர்ந்த  விவசாய கூலி தொழிலாளர்கள். மேற் கண்ட விபத்தில் இறந்தவர்கள் அனை ரும் தாழ்த்தப்பட்ட கூலி தொழிலா ளர்கள். இவர்கள் இழப்பால் பாதிக் கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு  உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்  என கேட்டு கொண்டுள்ளார்.