districts

பார்க்கிங் கட்டண வசூலை ரத்து செய்திடுக கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

கோவை, ஜன.17- கோவை மாநகராட்சி பகுதிகளிலுள்ள சாலைகளில் வாகனம் நிறுத்துவதற்காக கட்டணம் வசூலிக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மாவட்ட தலைவரும், கோவை மாநகராட்சி முன்னாள் வடக்கு மண்டலத் தலைவருமான சி.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கோவை மாநகராட்சி மக்கள் மள் றத்திற்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் 30 சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணங்களை தீர்மா னித்திருப்பது என்பது எந்த விதத்திலும் நியாமானதல்ல. ஏற்கனவே, கோவை மாநகராட்சி நிர்வாகம் இதே நடவடிக் கைக்கு திட்டமிட்டபோது மக்கள் எதிர்ப் பால் கைவிடப்பட்டதாகும். மக்கள் கடை வீதிகளுக்கு வந்து போவதே மிகுந்த சிர மம் என்னும் நிலையில், மாநகராட்சி இதற் கும் கட்டணம் வசூலிப்பது என்பது சரியா னதல்ல. மேலும், மணிக்கணக்கு, நாள்கணக்கு, மாதத்கணக்கு என்று மாநகராட்சி நிர்வா கம் தீர்மானித்திருக்கும் கட்டணம் என்பது  தனியார் தீர்மானித்தாகும். இந்த கட்ட ணம் வசூலிப்பதை ஒப்பந்தம் மூலம் எடுப்பவர்கள் செய்யும் முறைகேடுகளை விவரிக்க முடியாது. எனவே, பொதுமக் கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பி னரையும் கடுமையாக பாதிக்கும் இத்திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திட்டம் ரத்து

இதற்கிடையே, வாகனங்களை நிறுத்து வதற்கான கட்டணம் வசூலிப்பதற்காக தகுதி வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கேட்பு அறிக்கை பெறப்பட வில்லை. எனவே, மாநகராட்சி பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களுக்கென நிர்ண யம் செய்யப்பட்ட கட்டணங்களை ஒப்பந்த தாரர் மூலம் வசூலிக்கும் திட்டம் ரத்து  செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநக ராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.