districts

img

விளை நிலங்களை பாழ்படுத்துவதா? விவசாயிகள், பொதுமக்களின் வலுப்படும் எதிர்ப்பு

சேலம், ஜூன் 19- காவிரி – சரபங்கா நீரேற்ற திட்டம் மூலம் பட்டா உள்ள விளை நிலங்களை பாழாக்கக் கூடாது என வலியுறுத்தி ஜூன் 29 ஆம் தேதி ஜலகண்டாபுரத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி - சரபங்கா நீரேற்ற திட்டப்பாதிப்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் சனி யன்று ஜலகண்டாபுரம் அருகே உள்ள  செக்காரப்பட்டியான்வளவில் நடைபெற் றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட் டத் துணைத்தலைவர் பி.தங்கவேலு, ஒன் றிய பொருளாளர் ஏ.தங்கராஜ் மற்றும் இத் திட்டாத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து  அவர்கள் கூறுகையில், காவிரி - சரபங்கா  நீரேற்ற திட்டம் நங்கவள்ளி ஒன்றியம், சூரப் பள்ளி கிராமம், குப்பம்பட்டி ஏரி முதல் ஜல கண்டாபுரம் ஏரி வழியாக கட்டநாயக்கன் பட்டி ஏரிக்கும், குப்பம்பட்டி ஏரிமுதல் ஆவ டத்தூர் கிராமம் கோட்டைமேடு வைத்தியர் குட்டை சவுரியூர் ஏரிக்கும் இணைக்க போவ தாக கூறி, அதற்கான பணிகள் நடந்து வரு கிறது.

இதில், சுமார் 87 ஏரிகள் கொங்கணா புரம் மற்றும் எடப்பாடி ஒன்றியங்களில் மட் டுமே வருகிறது. சொற்ப ஏரிகள் தாரமங்க லம், ஓமலூர், மேச்சேரி, நங்கவள்ளி, சங்க கிரி ஒன்றியங்களில் இணைக்கப்படு கிறது. நங்கவள்ளி ஒன்றியத்தில் இணைக் கப்படும் ஏரிகளில் குப்பம்பட்டி முதல் ஜல கண்டாபுரம் மற்றும் கட்டிநாயக்கன்பட்டி ஏரி களை இணைத்திட நூறு சதவிகிதம் நீர்வழி யில் செயல்படுத்தப்பட உள்ளது. அதுபோல் குப்பம்பட்டி ஏரி முதல் கோட்டைமேடு வைத்தியர் குட்டை சவுரி யூர் ஏரிவரை நூறுசதவீதம் நீர்வழியில் செல்ல எப்எம்பி மேப்பில் நீர்பாதை இருக் கிறது. ஆனால், இத்திட்டம் முழுவதும் விவ சாயிகள் விளை நிலங்களை பாழ்படுத் திடும் வகையில் பட்டா நிலத்தில் போடப் பட்டு உள்ளது. திறந்தவெளி கால்வாய்  வழியே குடியிருப்புகள் பகுதியில் செயல் படுத்துகிறபோது பொதுமக்களுக்கும் பிரச் சனைதான். குழந்தைகள், வயதானவர்கள் எப்படி கால்வாய்யை கடப்பார்கள்?

இப் போது இருக்கும் பாதுகாப்பு அப்போது இருக்குமா? அதுவும் இல்லாமல், குப்பம் பட்டி ஏரியில் இருந்து ஜலகண்டாபுரம் ஏரிக்கு வர, சுமார் 20 ஏக்கர் முப்போகம் விளையும் நிலம் அழிக்கப்படுவது நியா யம்தானா? எல்லாவற்றிக்கும் மேலாக இப் பகுதிகளில் நீர்வழிப்பாதை ராஜப்பாதை போல் இருக்கும்போது பட்டா நிலத்தை யும், பனை, தென்னை உள்ளிட்ட மரங்களை யும் அழிக்கவேண்டிய அவசியம் என்ன? மேலும், பட்டா நிலங்களில் செல்வதனால் இழப்பீடு பெயரில் கோடிக்கணக்கில் அர சுக்கு இழப்பு ஏற்படுத்துவது ஏன்?  எனவே, காவிரி - சரபங்கா நீரேற்றத் திட் டத்தை விவசாயிகளுக்கு பாதிப்பின்றி, ஏற் கனவே இருக்கும் நீர்வழிப்பாதையில் செயல்படுத்த வலியுறுத்தி ஜூன் 29 ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு ஜலகண்டா புரம் அருகே உள்ள சூரப்பள்ளி விஏஓ அலு வலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது, என் றார்.