districts

img

நாடோடி வியாபாரிகள் மண்பாண்டம் விற்க எதிர்ப்பு

திருப்பூர், அக்.29 - ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட மண்பாண்டங்களை திருப்பூ ரில், சனியன்று நேரடியாக விற்பனை  செய்வதற்கு இங்குள்ள மண்பாண்ட  விற்பனையாளர்கள் எதிர்ப்புத் தெரி வித்து அவர்களை முற்றுகையிட்டனர். ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள், மண்பாண்டமாக செய்யப்பட்ட சப் பாத்தி சுடும் கற்களை 10க்கும் மேற் பட்ட வாகனங்களில் நாடோடிகளாக, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, மலிவு விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதி யாக தமிழகத்திலும் இது போல் விற் பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை மாலை  திருப்பூர் பிஎன் ரோடு மில்லர் நிறுத்தம்  அருகே அந்த நாடோடி வியாபாரிகள், வாகனத்தில் சப்பாத்தி கற்களை விற் பனை செய்து கொண்டிருந்தனர். அப் போது அங்கு வந்த சிலர், தாங்கள் திருப் பூரிலேயே மண்பாண்டம் தயாரித்து விற்பனை செய்யக் கூடியவர்கள் என்று  கூறிக் கொண்டு, அவர்களை முற்றுகை யிட்டனர். அவர்கள் கூறுகையில், திருப்பூரில்  40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்பாண் டம் செய்யும் தொழிலாளர்கள் உள் ளோம். மண்ணெடுக்க தடை, போது மான வர்த்தகமின்மை போன்றவற்றால் எங்கள் தொழில் நலிவடைந்த நிலை யில் உள்ளது. இந்நிலையில், வட மாநிலங்களில் இருந்து இது போன்ற மண் பாண்டகளை குறைந்த விலையில் வாக னங்களில் வந்து நேரடியாக விற்பனை யில் ஈடுபடுகிறார்கள். இது மேலும்  எங்கள் தொழிலை பாதிக்கும் என்பதால்  வாகனத்தை முற்றுகையிட்டோம் என்று  கூறினர். அதேசமயம் இச்சம்பவத்தை பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி பிர முகர் ஒருவர், அவர்கள் விற்பனை செய் வதை தடுக்க வேண்டியதில்லை என்று  கூறினார். இதன் பின்னர் வாகனத்தில் விற்பனை செய்ய வந்திருந்த நாடோடி கள் வேறு பகுதிக்குப் புறப்பட்டுச் சென்ற னர்.