districts

img

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தெருநாய்கள் நடமாட்டம்

பொள்ளாச்சி, மார்ச் 20- பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தெருநாய்கள் நடமாட்டம் காணப்படுவதால், நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர். பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உடுமலை சாலையில் அமைந்துள்ளது. இங்கு  உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தெருநாய் ஒன்று படுத்து ஓய்வெடுத்து வருகிறது. இதனால், சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே, மருத்துவமனை பாதுகாவ லர்கள் முறையாக பணி செய்வதை கண்காணிக்க வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.