தருமபுரி, ஆக.18- நீரோடை ஆக்கிரமிப் பாளர்கள் மிரட்டல் விடுத் ததால், நூறுநாள் பணி யாளர்கள் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலு வலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே ஏலகிரி ஊராட்சிக்குட்பட்ட கொத்தமல்லிக்காரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள நீரோடை வழிப்பாதை தூர்வாரும் பணியில் வியாழ னன்று நூறுநாள் வேலை திட்ட பெண் பணி யாளர்கள் ஈடுபட்டனர். அப்போது நீரோடை வழிப்பாதையை ஒட்டியுள்ள சில நிலஉரிமை யாளர்கள், நீரோடையை ஆக்கிரமித்துள் ளனர். இதனால் தூர்வாரும் பணியில் ஈடு பட்ட நூறு நாள் பெண் பணியாளர்களை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த ஏலகிரி ஊராட்சியை சேர்ந்த நூறுநாள் பணியாளர் கள் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் பெண் பணியாளர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். நீர் ஆதாரமாக விளங்கும் நீரோடையை மீட்க நடவடிக்கை எடுக்ககோரி தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த அதிகாரி கள் மற்றும் போலீசார், தர்ணாவில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதிய ளித்தனர். பின்னர் தர்ணா போராட்டத்தை கை விட்டு நூறுநாள் பெண் பணியாளர்கள் அங்கி ருந்து கலைந்து சென்றனர்.